Skip to main content

கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் வந்தடைந்தது! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

கர்நாடகா மாநிலத்தின் கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் குடிநீர் மற்றும் டெல்டா விவசாய பாசனத்திற்காக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), கபினி அணைகளில் இருந்து ஜூலை 16ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 

 

water in the Karnataka dam has reached Mettur! Delta Farmers Happy

 


இவ்விரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 8300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர், தமிழக எல்லையில் உள்ள முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு ஜூலை 20ம் தேதி வந்தடைந்தது. அப்போது நீர் வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கி, நேற்று (ஜூலை 22) மதியம் 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலை 3 மணி நிலவரப்படி 5000 கனஅடியாக மேலும் உயர்ந்தது. 

 


இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இங்கிருந்து மேட்டூர் அணைக்கு இன்று காலை (ஜூலை 23) 7 மணியளவில் காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 213 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

 

water in the Karnataka dam has reached Mettur! Delta Farmers Happy

 


இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த 16ம் தேதி நள்ளிரவு, கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஏழு நாள்களுக்குப் பிறகு இன்று மேட்டூர் அணைக்கு அந்த தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. பண்ணவாடி நீர்த்தேக்க பகுதி வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள அடிப்பாலாறு, பண்ணவாடி பகுதிகளில் காவிரி ஆற்றில் நுங்கும் நுரையுமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததால் இன்னும் தமிழகத்திற்கான நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,'' என்றனர்.

 

 

water in the Karnataka dam has reached Mettur! Delta Farmers Happy

 


மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1500 கனஅடியாக நீர்வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் திறந்து  விடப்படுகிறது. ஜூலை 23ம் தேதி காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக இருந்தது. நீர் இருப்பு 11.64 டிஎம்சியாக உள்ளது. இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு சேலம் வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''மேட்டூர் அணையில் 90 அடிக்கு தண்ணீர் இருந்து, அப்போது சம்பா சாகுபடிக்கு திறந்தால் தான் விவசாயிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும். போதிய தண்ணீர் அணைக்கு வந்தால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்,'' என்றார். கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் நிலையில், மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு சற்று தாமதமானாலும் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்பதே டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குறுவை சாகுபடிக்காக 61.09 கோடியில் சாகுபடி தொகுப்பு திட்டம் - முதல்வர் அறிவிப்பு!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

 61.09 crore Cultivation Package Scheme for Kuruvai Cultivation-CM Announcement!

 

கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நீர் திறந்துவைத்த நிலையில், தற்போது குறுவை சாகுபடிக்கான திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

 

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூபாய் 61.09 கோடியிலான குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  குறுவை நெல் சாகுபடிக்கான இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்புக்கு ரசாயன உரங்கள் ஆகியவை மானிய விலையில் விநியோகிக்கப்படும். நெல் விதைகள், உரங்கள், இடுபொருட்களின் மானியத்திற்கு ரூபாய் 50 கோடியும், வேளாண் இயந்திரங்கள் மானியத்திற்கு ரூபாய் 11.09 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3.5 லட்சம் ஏக்கர் என்ற இலக்கைவிட அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இந்தக் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம் மூலம் 2,07,259 விவசாயிகள் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2- ஆம் போக கடலை மற்றும் எள் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்பவானி வாய்க்காலில் 12 டிஎம்சியும், காலிங்கராயன் வாய்க்காலில் 5.12 டி.எம்.சி நீரும் இன்று முதல் 120 நாட்களுக்கு திறக்கப்படுகிறது.

ERODE DISTRICT BAVANI SAGAR DAM WATER RELEASED FOR DELTA


அதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.33 அடியாகவும், நீர் இருப்பு 84.71 டி.எம்.சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 1,168 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு 10,000 கனஅடியாக இருக்கிறது.மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து 600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.