Skip to main content

வ.உ.சி. துறைமுகத்திற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் 5 பேருக்கு நோட்டீஸ்

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
voc

 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில், மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

நெல்லையை சேர்ந்த முத்துராமன்  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் இயங்கிவருகின்றது.

 

தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த 2007 ஆண்டு 15.8 மில்லியன் டன் சரக்கு கையாள அனுமதி பெற்றுவிட்டு,தற்போது ஆண்டுக்கு ஆண்டு சரக்கு கையாளுவது அதிகரித்துள்ளதாகவும்,கடந்த 2016-17 ஆகிய ஆண்டில் 44.94  மில்லியன் டன் சரக்கு கையாண்டுள்ளனர்.   அனுமதிக்கப்பட்ட அளவைவிட சரக்கு கையாளுவதால் சுற்றுசூழல் அதிக மாசடைந்து வருகின்றது.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதில், துறைமுகத்தில் சுற்றுசூழல்துறையின் பாதுகாப்பு விதிமுறைகளை  அமல்படுத்தவில்லை என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.  கடந்த 2013 ஆண்டு உச்சநீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவில்,தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் நீண்ட நாட்களாக ஒப்புதல் இன்றி செயல்பட்டதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தொழிற்சாலைகளால் நிரம்பி வழிகிறது. மேலும் தொழிற்சாலைகள் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் முத்துநகரம் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாசடைந்த மாநகரம் என அழைக்கப்படுகிறது.  மாசு தன்மை அதிகமாக இருப்பதால் நகர்பகுதிகளில் விஷத்தன்மை அடைந்துள்ளது. எனவே தூத்துக்குடி துறைமுகம் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, " மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் , மத்திய மாசுகட்டுபாட்டு வாரியம் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட மாசுகட்டுபாட்டு வாரிய பொறியாளர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Supreme Court Notice to Election Commission

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டுகளை (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) முழுமையாக எண்ணக் கோரி ஏ.டி.ஆர். என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “விவிபேட் (V.V.P.A.T.) இயந்திரங்களில் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யப்படுகின்றன. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சதவீத விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக 100 சதவீதம் முழுமையாக ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “கூடுதல் அலுவலர்களை நியமித்து விவிபேட் இயந்திரத்தில் பதிவான அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.