Skip to main content

தியேட்டரில் இடம் பிடிப்பதில் தகராறு... இருவருக்கு கத்திக்குத்து...!

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

vv

 

தமிழகத்தில் 500 தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி நள்ளிரவே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. வேலூரில் அலங்கார் தியேட்டரிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

 


200 ரூபாய் விலை வைக்கப்பட்ட டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோவை காணச்சென்றனர். அப்படி சென்ற ரசிகர்கள் 5 பேருக்குள் தியேட்டரில் சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு அடிதடியாகியுள்ளது. அதற்குள் படம் போட்டுவிட அமைதியாக அமர்ந்தனர். முன்வரிசையில் வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த ராஜேஷ், பிரசாந்த் என இருவர் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டு இருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த இருவர் அவர்கள் சீட் மீது காலை தூக்கிப்போட்டுள்ளனர். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் அடிதடியாக ராஜேஷ், பிரசாந்த் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர். அவர்கள் வலியால் கத்தினர். குத்தியவர்கள் எஸ்கேப்பாகிவிட்டனர்.

 


பின்னர் தியேட்டர் ஊழியர்கள் மூலமாக கத்திக்குத்துக்கு ஆளானவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரும் அனுமதிக்கப்பட்டள்ளனர். இதில் பிரசாந்த்க்கு அதிக கத்தி குத்து விழுந்துள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


இதுப்பற்றி வேலூர் தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, கத்தியால் குத்தியது யார் என தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்