Skip to main content

நா இறந்த பிறகாவது கொடுமைப்படுத்துற HOD மாறுவாருன்னு நினைக்கிறேன்! தற்கொலைக்கு முயன்ற மாணவியின் கண்ணீர் கடிதம்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

சமீப காலமாக உயிர் பலிகளின் புகழிடமாக கல்வி நிறுவங்கள் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை, திருச்சி கே.கே.நகர் அய்மான் கல்லூரியில் ஜார்கண்ட மாணவி ஜெப்ரான்பர்வீன் தற்கொலை, உறையூர் நர்சிங் கல்லூரியில் சுனித்தா தற்கொலை இன்று பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நிலவியல்துறை இரண்டாம் மாணவி நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பினாயில் குடித்து தற்கொலை முயற்சி என அடுத்தடுத்த மாணவிகள் தற்கொலை கல்வி நிலையங்களில் நடக்கும் டார்ச்ச தான் என்பதையே உணர்த்துகிறது.

bharadhidasan university student incident department hod push police


திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பினாயில் குடித்து உயிருக்கு போராடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மாணவி தன் கைப்பட இரண்டு பக்க கடிதம் வெளியாகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடித்தில்,
 

Saro, Gaja சாரி டா உங்களை விட்டு நான் போறேன். அதனால முடியல, யாராலயும் நம்ம HOD சாருக்கு எதிர்த்து ஒன்னும் பண்ண முடியாது. எனக்கு best friend நீ தான் Gaja உனக்கு 1 st year வந்தப்பவே உனக்கு எந்த ஹெல்ப் பண்ண முடியல டி, எங்க வீட்ல எவ்வளவு சொன்னாலும் நீ Cyb ta இரு உன்னை எதுவும் சொல்லவே இல்ல அதான் நீ அமைதியா படிச்சா போதும் சொன்னாங்க.

நம்மளோட பிராப்ளம் பற்றி வீட்டில் சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க. ஏன்டா நமக்கு HOD சார் இப்படி பண்றாங்க, நாம எல்லோரும் பிரண்ட்ஸ் தானே நம்ம கிளாஸ்ல பாய்ஸ் கூட பேசறது HOD y தப்பா பேசறாங்க.

bharadhidasan university student incident department hod push police

 

லாஸ்ட் இயர் இன்னும் இப்படித்தான் கஷ்டப்படுத்தி நாங்க செய்யாத தவறுக்காக நீ கஷ்டப் படுத்த மாதிரி இப்போ நம்ம கிளாஸ்ல எல்லோரும் பீல் பண்றாங்க. குறிப்பா இப்ப பிராப்ளத்துல மாட்டின ஆறு பாய் டி ….. எனக்கு எப்பவும் என்னோட கஷ்டத்திலும் சந்தோஷங்களையும் கூட இருந்த பிரண்ட்ஸ் நீங்க தான்டா நீங்க எல்லாம் கஷ்டப்படுறதை என்னால பாக்க முடியல. என்னோட நிலை யாருக்கும் வரக்கூடாது. நான் போனதுக்கு பிறகு அவரை இப்படி கொடுமைப்படுத்துற HOD மாறுவாரான்னு பார்க்கலாம் நீங்க ஹாப்பியா இருக்கணும் ஆசைப்படுறேன். நம்ம சீனியர்கள் யாரோ நமக்கு ஹெல்ப்புக்கு வரமாட்டாங்க

கம்ப்ளைன்ட் HOD சார் மேல கொடுக்கலாம்னு நினைச்சாலும் அவரை ஒன்னும் பண்ண முடியாது எனக்கு படிக்கவே பிடிக்கல, டிபார்ட்மெண்டுக்கு வரும்போது டெய்லி பயந்து பயந்து வர மாதிரி இருக்கு, நான் கிளாஸ்ல உன் கிட்ட பேசிகிட்டு இருந்ததுக்கே என்னோட அப்பா முன்னாடி உங்க பொண்ணு படிக்க மாட்டேங்குறானு சொன்னாங்க HOD sir,
 

bharadhidasan university student incident department hod push police


கஷ்டமா இருந்துச்சு என்கிட்ட நீ என்ன கதை பேசுவனு லெட்டர் எழுதி கொடுக்க சொன்னாங்க ரொம்ப போர்ஸ் பண்ற மாதிரி இருக்கு, Yesterday நம்ம கிளாஸ் பாய்ஸ் எக்ஸாம் எழுதாம அழுதுகிட்டு இருந்தாங்க, எனக்கு எக்ஸாம் எழுத பிடிக்கவே இல்ல,
 

6 boys - அ இவ்வளவு கஷ்டப்படுறாங்க நாளைக்கு உங்களுக்கு இதே நிலைமைதான் முடிஞ்சா இந்த HOD, ….கிட்ட இருந்து போயிடுங்க ஓகேவா,
 

எல்லாரும் கஷ்டப்படுவது காரணம் HOD அகிலா Mam…எங்க வீட்ல ரொம்பக் கஷ்டப்படுவாங்க அவங்க நிற்க வைத்து யாரும் Question கேட்க கூடாதுன்னு நினைக்கிறேன் என்னோட பெற்றோரை பார்த்துக்கோங்க சாரி சாரி குட் பை மிஸ் யூ- நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று முடிகிறது.. அந்த மாணவியின் கடிதம்.


இது குறித்து மாணவர்களிடம் பேசுகையில் மாணவி நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இராஜபாளையம் சொந்தவூர், பாரதிதாசன் பல்கலைகழத்தில் விடுதியில் தங்கி படிக்கிறாங்க, இந்த HOD கடந்த இரண்டு மாதங்களாக மாணவிகளின் செல்போன்களை வாங்கி அதில் இருக்கும் படங்களை எல்லாம் டவுன்லோடு பண்ணி வச்சு மிரட்ட ஆரம்பிச்சு இருக்கிறார்கள். மாணவ மாணவிகள் ஜீஸ் குடிக்கும் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு நீ வெற எதையோ குடிக்கிற மாதிரி சொல்லிடுவேன், என்று பிரக்டிகல் மார்க்கில் குறைச்சிடுவேன் என்று சர்வாதிகாரி போன்று மிரட்டி டார்ச்சர் பண்ணியிருக்கிறார் என்கிறார்கள். இதில் உச்சக்கட்டம் மாணவி நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பினாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்தது என்கிறார்கள்.

bharadhidasan university student incident department hod push police

இது குறித்து நிலவியல்துறை HOD சக்திவேலிடம் மாணவி நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடிதம் தற்கொலை குறித்து பேசிய போது.. இந்த துறை தனிபட்ட முறையில் சிறப்பு அந்தஸ்துடன் செயல்படுகிறது. பல்கலைகழகம் முழுமைக்கும் தெரியும், ஏதோ விடுதியில் ஏற்பட்ட பிரச்சனையில் விளையாட்டுத்தனமாக பினாயில் குடித்தாக விடுதி காப்பாளர் என்னிடம் சொன்னார். நான் இது குறித்து பதிவாளருக்கு கடிதம் அனுப்பிட்டேன். நீங்கள் சொல்வது போல் நான் யாரையும் டார்ச்சர் செய்யவில்லை என்று முழுமையாக மறுத்தார்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.