Skip to main content

இலங்கை எம்.பியுடன் விஜயகாந்த் மகன் சந்திப்பு ! 

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

 

விஜயகாந்த் வீடு, கல்லூரி எல்லாம் ஏலத்திற்கு வந்திருக்கிறது என்கிற பத்திரிகை விளம்பரத்திற்கு பிறகு தேமுதிக சார்பில் பிரேமலதா விளக்கம் கொடுத்த நிலையில் விஜயகாந்தின் இளையமகன் திருச்சியில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழாவில் பங்கேற்பதற்காக விஜயபிரபாகரன் எஸ்.ஆர் விடுதியில் தங்கியிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் ஊழல் செய்து கடனாளி ஆகவில்லை. சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்துதான் கடன் பெற்றார் என்றார். கடனை அடைக்க கால அவகாசம் தரப்படவில்லை. கடன் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என்றார். 

t

.இதற்கு இடையில் காலையில் தான் தங்கியிருந்த எஸ்.ஆர்.எம். விடுதியில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு எம்பியும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான செய்யித் அலி ஸாஹிர் சந்தித்து பேசினார்.

 

அப்போது அவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும் நாட்டு நடப்புகள் குறித்தும் விஜயபிரபாகரனிடம் குறித்து பேசியிருக்கிறார்கள். புதிதாக அரசியலில் நுழைந்து இருக்கும் விஜயபிரபாகரனுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 

 

விஜயகாந்திற்கு இலங்கையில் அதிக ரசிகர்களும் நலம்விரும்பிகளும் இருப்பதாக அங்கு வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். 

 

விஜயகாந்த் இலங்கை தமிழர்களுக்காக தன்னுடைய பிறந்தநாளை புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.