Skip to main content

7 பேரை விடுதலை செய்யக்கோரி சிவகங்கையில் துவங்கிய பேரணி சென்னை ஆளுநர் மாளிகையில் நிறைவு

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
p

 

7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்திட  ஆளுநரை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கடந்த 10 ம் தேதி சிவகங்கையில் தி.வேல்முருகனால் துவக்கி வைக்கப்பட்ட, சிவகங்கை முதல் சென்னை வரையிலான மிதிவண்டி பேரணி இன்று காலை 11 மணி அளவில் மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகையை வந்தடைந்தது,.

 

p

அப்போது,

தொல் திருமாவளவன். அவர்கள் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

செந்தமிழன். அவர்கள் முன்னாள் அமைச்சர்.

வெற்றிவேல்.ச ம உ அவர்கள்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

மல்லை சத்யா.அவர்கள் மதிமுக.

வீரபாண்டியன். அவர்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தனியரசு.ச ம உ அவர்கள் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை.

குணங்குடி அனீபா. அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி.

ஆச. உமர் பாரூக் அவர்கள் sdpi கட்சி.
அப்துல் ரசாக். அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

ஆவல் கணேசன். அவர்கள் தமிழர் தேசிய முண்ணனி.

தியாகு. அவர்கள். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

விடுதலை ராஜேந்திரன் அவர்கள். திரு.தபசி குமரன் அவர்கள்.திராவிடர் விடுதலைக் கழகம்

திருமுருகன் காந்தி அவர்கள், மே 17 இயக்கம்.

 அருணபாரதி. அவர்கள் தமிழ் தேசிய பேரியக்கம்

குமரன் அவர்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

டைசன். அவர்கள் தமிழர் விடியல் கட்சி.

பாலன். அவர்கள் தமிழ்நாடு மக்கள் கட்சி.

அற்புதம்.அம்மாள் அவர்கள், பேரறிவாளன் அவர்களின் தாயார்.

 செந்தில். அவர்கள் இளந்தமிழகம்.

சுந்தரமூர்த்தி. அவர்கள். இளந்தமிழர் முன்னணி.

உமாராணி 

லயோலா மணி  மாணவர் கூட்டமைப்பு.
ஜலீல் ஜல்லிக்கட்டு அமைப்பு.

ஆகிய அரசியல் கட்சிகள்,மற்றும் அமைப்புகளின் சார்பில் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மிதிவண்டி பேரணியில் பங்கேற்ற தோழர்களை வரவேற்று தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.