Skip to main content

'யுடியூப்' வீடியோ பார்த்து மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன்... ஆபத்தான நிலையில் மாணவி...!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை என்ற திரைப்படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வயிற்றைக் கொடூரமாகக் கிழித்து குழந்தையை எடுப்பார் அப்படத்தின் வில்லன் ஆன ஆர்.கே.சுரேஷ். இந்தக் காட்சியைப் படத்தில் வைத்ததற்காக இயக்குனர் பாலாவையும், நடிகர் ஆர்.கே.சுரேஷையும் பலர் விமர்சித்தனர். இந்த சினிமா பட காட்சியை நிஜகாதலிக்கு அரகேற்றியுள்ளான் ஒரு கொடூர காதலன்.

 

tiruvallur incident-lover admit hospital

 



திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதே ஆன அரசுக் கல்லூரி மாணவி சித்ரா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சவுந்தர் என்பவரும் சித்ராவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தனிமையிலும் சந்தித்து காதலித்து வந்தவர்கள் எல்லையை மீறியதால், சித்ரா கர்ப்பமாகி உள்ளார். இந்த விஷயம் நாளடைவில் தெரிய வர, வெளியே யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க பல முயற்சிகளை இருவரும் எடுத்துள்ளனர்.

இது பலன் அளிக்காத நிலையில்,  அந்த பெண் 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில் காதலன் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள காப்புக்காடு ஒன்றுக்கு மார்ச் மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை அழைத்துச் சென்று யுடியூப் வீடியோ பார்த்து ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார். 

இதில் அந்த இளம் பெண்ணிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தற்போது அந்த இளம் பெண் ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆபரேஷன் செய்து எடுக்கப்பட்ட ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபரீத காதல் கர்ப்பத்தை மூடிமறைக்க இளம் பெண்ணிற்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்த சவுந்தரை, கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சாதாரண நபர் அறுவை சிகிச்சை செய்வது என்பது சாத்தியமான விஷயம் அல்ல. மேலும் ஆபரேஷன் செய்து வயிற்றுப் பகுதியைக் கிழித்து எடுக்க எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் செய்ய முடியாது. அதே போல மயக்க மருந்து செலுத்தாமலும் இப்படிச் செய்ய முடியாது என்பதால் மருத்துவம் தெரிந்த யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசரணை நடத்தி வருகின்றனர். 


   

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.