Skip to main content

ஊரடங்கிற்கு நடுவே கள்ளச்சாராயம் விற்ற 20 பேர் கைது! 2000 லிட்டர் சாராயம் பறிமுதல்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் கள்ள மார்க்கெட்டில் சரக்கு பாட்டில்கள் விற்பனை சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது அதுவும் தீர்ந்துபோன நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிராமத்தில் உள்ள குடிமகன்கள் பார்வை தற்போது கள்ளச்சாராயம் பக்கம் திரும்பியுள்ளது.

 

 Tiruppattur Counterfeit liquor issue - 20 people arrested



திருப்பத்தூர் மாவட்டத்தில் பலயிடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றன. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் உத்தரவின் கீழ், திருப்பத்தூர்,  நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மது அமலாக்கப் பிரிவு மற்றும் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது கள்ளச்சாராயம் விற்பது உறுதியானதை அடுத்து, அந்த செயலில் ஈடுபட்ட 29 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் 20 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2000 லிட்டர்க்கு மேல் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ரெய்டுக்கு சென்ற இடத்தில் 1000 லிட்டர் சாராய ஊரல்களை அழித்துவிட்டு வந்துள்ளனர். இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ச்சியாக ரெய்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் காவல்துறையினர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.