Skip to main content

புவனகிரியில் நீட் தேர்வை கண்டித்து போராட்டம்

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
புவனகிரியில் நீட் தேர்வை கண்டித்து போராட்டம்



கடலூர் மாவட்டம் புவனகிரியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசின் மக்கள் விரோத கொள்கையான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அனிதா சாவுக்கு நீதி கேட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் மாதவன்,நிர்வாகிகள் சதானந்தம்,பாலமுருகன், லெனின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நீட் தேர்வை அமுல்படுத்திய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.

காளிதாஸ்

சார்ந்த செய்திகள்