Skip to main content

மர்ம மரணத்திற்கு காரணம்... மாணவர்களா? ஆசிரியர்களா? விசாரிக்காமலேயே வழக்கை முடித்த காவல்துறை?

Published on 08/12/2019 | Edited on 08/12/2019

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனின் மர்ம மரணத்தில், "பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் ஆசிரியர் திட்டினார்" என்று ஒரு தரப்பினரும், "சக மாணவர்கள் கேலி செய்தார்கள்" என மற்றொரு தரப்பினரும் ஒருவரையோருவர் குற்றஞ்சாட்டிய நிலையில், விசாரணையை முழுதாக நடத்தாமலே மாணவனின் மர்ம மரணத்தை தற்கொலை என பதிவு செய்து வழக்கை முடித்துள்ளது காவல்துறை.
 

sivagangai district kundrakudi school student 10th std incident police

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பேயன்பட்டியினை சேர்ந்தவர்கள் பொன்னழகு- கவிதா தம்பதியினர். இவர்களின் மூத்த மகன் அபிசேக் கலைக்கல்லூரியில் முதலாமாண்டும், இளைய மகன் அசோக் அருகிலுள்ள ஓ.சிறுவயலிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 10- ஆம் வகுப்புமாக கல்வி பயின்று வருகின்றனர். இதில் இளையமகன் அசோக் முதல்நாள் மாலைவேளையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மறுநாள் காலையில் பள்ளி அருகிலுள்ள பயன்பாடற்ற கட்டிடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளான்.


குன்றக்குடி காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் விசாரணையை தொடங்கியவர்கள், " இறந்த அசோக் பாடங்களில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், மாணவனின் நடத்தைக் குறித்து ஆசிரியர் பெற்றோர்களை பள்ளி அழைத்து வரக் கூறியிருப்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்." என மேற்கொண்டு விசாரிக்காமலேயே பொதுவானக் காரணம் கூறி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது குன்றக்குடி காவல்துறை. இதனையே கூறி பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதமும் வாங்கிக் கொண்டது தனிக்கதை.
 

 

sivagangai district kundrakudi school student 10th std incident police

"பத்தாம் வகுப்பு ஆ பிரிவு படிக்கும் அசோக் படிப்பில் மிகக் கெட்டி. அத்தோடு ஒழுக்கமானவன். அதனைக் கருத்தில் கொண்டே அவனுடைய வகுப்பிற்கு அவன் வகுப்பு தலைவராக்கியுள்ளார்கள். அவன் வகுப்பு தலைவரானதிலிருந்தே, தொடர்ந்து அவனை குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டும் மிரட்டியும், அடித்தும் வந்துள்ளனர். இதில் அசோக்கின் ஐடி கார்டை பறித்தும், டேக்கை அறுத்தும், படத்தை கிழித்தும் உள்ளனர். அதுபோக, இவனுடைய குரல் மென்மையாக இருந்ததால் அதனையும் சேர்த்து கேலி செய்துள்ளனர். அந்த கேலி, தொடர் மிரட்டல் இவைகளால் பயம் கொண்டு கணிதத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற்றான்.


ஆனால், பெயில் இல்லை. மதிப்பெண் குறைவானதால் ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரச்சொல்லியுள்ளனர். வெளியில் மாணவர்களைப் பற்றிக் கூறினால் பிரச்சனை ஆகிவிடும், ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் கூற முடியாத நிலை. இவைகளால் கூட அவன் இந்த முடிவினை எட்டியிருக்கலாம். போலீஸிடம் விபரம் கூறினோம். போலீஸ் அதனைக் கொண்டு கொள்ளவே இல்லை. இப்பொழுது கண்டு கொள்ளவில்லை எனில் அசோக்கின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்." என்கின்றனர் அசோக்கின் உறவினர்கள். இதே வேளையில், அந்தப்பள்ளி அருகில் கஞ்சா விற்பனை நடந்து வருவதும் சகஜமான ஒன்று என்பதனையும் மறந்துவிடக்கூடாது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.