Skip to main content

தொடர் வாகன திருட்டில் சிக்காத நபர் காதலிக்காக நாய் திருடிய போது சிக்கிய சம்பவம்

Published on 06/11/2022 | Edited on 06/11/2022

 

Serial vehicle theft complaint... The young man was caught stealing a dog for his girlfriend

 

சென்னையில் இரு சக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்த இளைஞர் ஒருவர் தன் காதலிக்கு பரிசளிப்பதற்காக நாய் ஒன்றை திருடிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை இளைஞர் ஒருவர் திருடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுஜித் என்ற அந்த 22 வயது இளைஞன் சாலிகிராமம் தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் என்று கூறப்படுகிறது. இவர் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள இருசக்கர வாகனத்தை முதலில் திருடி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நபர்களின் வாகனங்களை சுஜித் திருடியுள்ளான்.

 

இப்படியான தொடர் திருட்டுக்கள் நிகழ்ந்ததையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அனைத்து திருட்டுக்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும் திருட்டில் ஈடுபட்ட சுஜித்தை கைதுசெய்ய முடியவில்லை. இந்நிலையில் சுஜித் தன் காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக உயர் ரக நாய் ஒன்றை திருடியுள்ளான். அப்பொழுது நாயின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காட்சிகள் மூலம் அவனை பின் தொடர்ந்து சென்று சுஜித்தை இறுதியாக கைது செய்தனர். அவனிடமிருந்து திருடப்பட்ட நாய், இருசக்கர வாகனங்கள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தன் காதலிக்கு பரிசாக கொடுப்பதற்காக நாயை திருடியதாக இளைஞன் சுதீஷ் ஒப்புக்கொண்டதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.