Skip to main content

தமிழகத்திலேயே அதிக ஓட்டில் திமுக வெற்றிபெற்ற திண்டுக்கல் தொகுதி! உற்சாகத்தில் உ.பி.க்கள்!!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

அதிமுகவிற்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிதான். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய உடனே நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் தனித்து போட்டியிட்டார். அப்போது அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை களமிறக்கினார். அப்பொழுது சுயேட்சை சின்னமாக இருந்த இரட்டை இலையில் மாயத்தேவர் போட்டியிட்டதின் மூலம் வெற்றி பெற்றார். 

 

  Dindigul constituency in Tamil Nadu has DMK won the highest number of votes

 

அன்றிலிருந்து இரட்டை இலை சின்னம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறது. அதை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருக்கும் வரை இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமலேயே அ.தி.மு.க.வில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது கூட்டணி கட்சிக்கு ஒதுக்காத இந்த தொகுதியை தற்போது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் இந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ம.க.விற்கு ஒதுக்கியதின் பேரில் ஜோதிமுத்துவை வேட்பாளராக பா.ம.க. அறிவித்தது. இதனால் அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களும் பெரும் அதிருப்தியில் இருந்தனர். 

 

 

அதோடு தேர்தல் பணியிலும் ஆளுங்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து இருந்து வந்தனர். அதுபோல் தி.மு.க. சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த விவசாயி கட்சியில் சாதாரண தொண்டருமான வேலுச்சாமியை திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக ஐ.பி. பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கழகத் தலைவர் ஸ்டாலின் ஐ.பி.யின் பரிந்துரையின் பேரில் வேலுச்சாமிக்கு திண்டுக்கல் தொகுதியில் போட்டி போட சீட் கொடுத்தார். ஏற்கனவே 1984க்கு பிறகு தி.மு.க. இத்தொகுதியில் போட்டி போட்டதால் உ.பி.க்களும் உற்சாகமாக தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகள் தி.மு.க வசம் இருந்ததால் இத்தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களான கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளரும், கொறடாவுமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் தலைமையிலும் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றினார்கள். 

 

  Dindigul constituency in Tamil Nadu has DMK won the highest number of votes

 

அதன் அடிப்படையில் தான் கடந்த மாதம் 18ம் தேதி திண்டுக்கல் பாராளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற்ற வாக்காள மக்களின் ஓட்டுக்களும் திண்டுக்கல் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. இப்படி வைக்கப்பட்டிருந்த வாக்காள மக்களின் ஓட்டுக்களை தான் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டதின் மூலம் தி.மு.க. வேட்பாளரான வேலுச்சாமி 7லட்சத்து 46ஆயிரத்து 523 ஓட்டுக்களும், அ.தி.மு.க. வேட்பாளரான ஜோதிமுத்து 2லட்சத்து 7ஆயிரத்து 551 ஓட்டுக்களும் வாங்கினார். இதன்மூலம் வேலுச்சாமி 5லட்சத்து 38ஆயிரத்து 972 வாக்கு வித்தியாசத்தில் தமிழகத்திலேயே வேலுச்சாமி அதிக ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றதின் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான வினயிடம் சான்றிதழை பெற்றார். அதை மாவட்ட கழக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பி. தலைமையில் சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட சில பொறுப்பாளர்களுடன் சென்னைக்கு சென்று கழகத் தலைவர் ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வெற்றி பெற்ற சான்றிதழை கொடுத்து ஆசி வாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. உறுப்பினரான வேலுச்சாமி. 

 

DMK

 

ஆனால் இந்திய அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் வேலுச்சாமி பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.விற்கு அடித்தளம் போட்ட திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர், ஒட்டன்சத்திரம் சட்ட்மன்ற தொகுதிகளில் டெபாசிட் கூட அ.தி.மு.க. வாங்கவில்லை அந்த அளவுக்கு தி.மு.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று சாதனை படைத்து இருக்கிறது. 

 

 

இப்படி 35 வருடங்களுக்கு பிறகு  திண்டுக்கல் தொகுதியில் உதயசூரியன் உதிப்பதற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தேர்தல் ஆலோசனையின் பேரில் மேற்கு மாவட்டச் செயலாளர் கொறடா சக்கரபாணி, கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் தொண்டர்களின் கடுமையான தேர்தல் பணியின் மூலம்  திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கோட்டையாக உருவாகி இருக்கிறது!.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.