Skip to main content

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் இணைந்துதான் உள்ளார்கள்..! -சிரித்தபடியே பேசிய செங்கோட்டையன்!

Published on 29/06/2019 | Edited on 29/06/2019


"பொய்யை சொன்னாலும் பொறுந்துகிறபடி சொல்ல வேண்டும் என்பது வழக்க மொழியாக இருந்து வருகிறது. அந்த மொழியை மிகச் சரியாக கடைபிடித்து வருகிறார் அமைச்சரான அண்ணன் செங்கோட்டையனுங்க.." என வெளிப்படையாகவே பேசுகிறார்கள் ஈரோடு அ.தி.மு.க. ர.ர.க்கள். கழுவுற மீனில் நழுவுற மீனாக அரசியல் சம்பந்தமான கேள்விகளை தவிர்த்து அந்த இடத்தை விட்டு பறந்து செல்பவரான மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியது.

"தமிழகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.

sengkottaiyan


பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்காக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல்வர்,ஆணை பிறப்பித்தனர். அது தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. எனது பொறுப்பில் உள்ள பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரை பதினொன்று மற்றும் பனிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  இப்போது கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 240 நாட்கள் அவர்கள் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் மொத்த நாட்கள் 210 தான். ஆகவே பிளஸ்-1 ,பிளஸ்-2 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி லேப்-டாப்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2017 -18 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கொஞ்சம் பொறுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சென்று உள்ளனர். பிளஸ் -2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டித்தான் இப்போதுள்ள பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

 

sengkottaiyan interview

அவர்களுக்கு லேப்-டாப்கள் வழங்கும்போது ஓய்வு நேரங்களில் அவற்றை டவுன்லோடு செய்து மாணவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும். 2017 -18 ஆம் ஆண்டு படித்த மாணவ - மாணவிகளுக்கு இன்னும் மூன்று மாதத்தில் லேப்டாப்புகள் உறுதியாக வழங்கப்படும். தமிழ்நாட்டை பொருத்தவரை பல நல்ல திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம்.  சட்டமன்ற கூட்ட தொடரில் வருகிற  2 -ந் தேதி என்னுடைய துறை சம்பந்தமான மானியம் கோரிக்கை நடைபெற உள்ளது.  பள்ளிக்கல்வித்துறை பொருத்தவரை கல்விக்கு என்று தனியாக தொலைக்காட்சி தொடங்க அனுமதி கோரி இருக்கிறோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த  திம்பம்மலைப் பகுதியில் வனத்துறை சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  பின்னர் முதல்வரும் வனத்துறை அமைச்சரும் எடுத்துக் கூறி மாவட்ட கலெக்டர் மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரத்தில் லாரிகள் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம்  தமிழகம், கர்நாடகா இரு மாநில போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுங்க கட்டண விஷயத்தை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த சிலர் நினைத்தனர் ஆனால் அது பலிக்கவில்லை." இவ்வாறு பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் "சார் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. திரும்ப பெற்றுள்ளதே..? "ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்..." "பா.ஜ.க.விடம்..." "மத்திய அமைச்சரவையில்.." என பல கேள்விகள் தொடர்ந்து கேட்க நிருபர்கள் முயல சிரித்துக் கொண்டே கும்பிடு போட்ட அமைச்சர் செங்கோட்டையன் "முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். இணைந்து பணியாற்றி தமிழகத்தை சிறந்த மாநிலமாக கொண்டு செல்கிறார்கள்.." என அவர் சொல்லி முடிக்கும் முன்பே கூட்டத்தில் இருந்த ர.ர. ஒருவர் கல கல வென சிரிக்க செங்கோட்டையனாலும் சிரிப்பை அடக்க முடியாமல் காருக்குள் ஏறி கண்ணாடியை ஏற்றிக் கொண்டு அவர் சொன்ன பதிலை அவரே நினைத்து வாய் விட்டு சிரித்துக் கொண்டே போனார்.
 

அண்ணன் கழுவுற மீனில் நழுவுற மீனப்பா.." என ர.ர.க்கள் மீண்டும் கமெண்ட் அடித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.