Skip to main content

சென்னையில் தனியார் மருத்துவமனை பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா- ஊழியர் கைது!!

Published on 28/12/2018 | Edited on 31/12/2018
 Secret camera of women restroom in private hospital in Chennai - Employee arrested!

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கிட்னி மருத்துவமனையில் பெண்கள் உபயோகிக்கும் கழிவறையில் மறைமுகமாக ஒளித்து வைக்கப்பட்ட கேமரா பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆர் பி ஸ்கேன் என்று கிட்னியில் உள்ள கல்லை நீக்கி சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையில் இன்று மாலை பெண் ஒருவர் பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்ற அந்தப் பெண் இந்த அறையில் ஏதேனும் ஒளித்து வைக்கப்பட்ட கேமராக்கள் உள்ளதா என சந்தேகித்துள்ளார். அண்மையில் சென்னையில் தனியார்  பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது அதேபோல் இந்த அறையிலும் கேமராக்கள் இருக்குமோ என்ற பயத்தில் தனது மொபைலில் உள்ள ரகசிய கேமராவை கண்டறியும் ஆப் மூலம் அந்த அறையை சோதனை செய்துள்ளார்.

 

அப்பொழுது அந்த அறையில் ரகசிய கேமரா வைத்திருப்பது தெரிந்தது. அதனையடுத்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்த பெண் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற போலீசார் மருத்துவமனையின் பெண்கள் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவை கைப்பற்றினர். மேலும் அதில் பல்வேறு பெண்களின் அந்தரங்க காட்சிகள் பதிவு செய்யப்பட்டது தெரியவர அந்த கேமராவை பொருத்தும் நபரும் அந்த கேமராவில் பிடிபட்டுள்ளார். அந்த கேமராவை பொருத்திய  மருத்துவமனை ஊழியரான பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.