Skip to main content

சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு காலமானார்!

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

Sarpatta parambarai Armugam passes away

 

வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இயக்குநர் பா. ரஞ்சித் உருவாகிய படம் சார்பட்டா. இந்தப் படத்திற்கு பிறகு வடசென்னையில் இருந்த குத்துச்சண்டை பரம்பரைகள் மற்றும் வீரர்கள் பற்றிய பேச்சு மீண்டும் துளிர்த்து எழ ஆரம்பித்தது. 

 

வடசென்னை படத்தினை இயக்கிய பா.ரஞ்சித், வடசென்னையில் சார்பட்டா பரம்பரையில் இருந்த ஆறுமுகம் என்பவரைச் சந்தித்து அவரிடம் சார்பட்டா பரம்பரையின் கதையை கேட்டு, அந்த படத்தை இயக்கினார். 

 

இந்நிலையில், சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசாக அறியப்படும் ஆறுமுகம் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 68. ஆறுமுகத்திற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்ற நிலையில், அங்கிருந்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். சார்பட்டா பரம்பரையின் ஆறுமுகத்திற்கு ‘நாக் அவுட் கிங்’ என்ற சிறப்பு பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்