Skip to main content

சேலம் இரும்பாலையில் துணை ராணுவப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்?

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Reason behind the sisf passed away case

 

சேலம் இரும்பாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கான பின்னணி தெரிய வந்துள்ளது. 

 

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அருகே உள்ள அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(36). மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், சேலம் இரும்பாலை வளாகத்தில் மனைவி சித்ரா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், டிச. 7 ஆம் தேதி சக்திவேல் இரும்பாலையின் முதல் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தார். மாலை 3.10 மணியளவில் சக்திவேல் திடீரென்று தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

இதைப் பார்த்த சக சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இரும்பாலை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜெய்சல்குமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

காவல்துறை விசாரணையில், சில நாள்களுக்கு முன்பு சக்திவேலுக்கும் அவருடைய மனைவி சித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக்கொண்டு சித்ரா தனது குழந்தைகளுடன் தேனிக்குச் சென்று விட்டார். இதனால் சக்திவேல் கடந்த இரு நாள்களாக மன வருத்தத்தில் இருந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

 

சக்திவேலின் மனைவி, உறவினர்கள் ஆகியோர் வியாழக்கிழமை (டிச. 8) சேலம் வந்தனர். உடற்கூராய்வு முடிந்த பின்னர் காவல்துறையினர் சக்திவேலின் சடலத்தை அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தனர். இது ஒருபுறம் இருக்க, தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.