Skip to main content

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி கொன்ற நண்பன் உள்பட 4 பேர் கைது!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை பணம் பறிக்கும் நோக்கில் கடத்திக் கொலை செய்த நண்பன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நாச்சம்பட்டி செலவடையைச் சேர்ந்தவர் சக்திவேல் (38). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ரேவதி (32). இவர்களுக்கு சிவபிரியா (15) என்ற மகளும், தர்ஷன் (12) என்ற மகனும் உள்ளனர். 


கடந்த 2018ம் ஆண்டு செப்.18ம் தேதியன்று அவசர வேலை இருப்பதாக மனைவியிடம் சொல்லிவிட்டு வெளியே சென்ற சக்திவேல், அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ரேவதி, ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

real estate owner incident four persons arrested police

தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்களின் விவரம், அடையாளம் தெரியாத சடலங்களின் பட்டியல் சேகரித்து காவல்துறையினர் விசாரித்தனர். மேட்டுப்பாளையம் காவல் எல்லையில் 2018ம் ஆண்டு செப். 24ம் தேதியன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. விசாரணையில், அங்கே சடலமாகக் கிடந்தது சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் சக்திவேல்தான் என்பது தெரிய வந்தது.


அவருடைய செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தபோது, சம்பவத்தன்று சக்திவேலை, ஈரோடைச் சேர்ந்த அவருடைய நண்பர் சீனி என்கிற சீனிவாசன் (42) என்பவர் அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. 


அவரிடம் நடத்திய விசாரணையில் சக்திவேலை கடத்திச்சென்று பணம் பறிக்க முயன்றதும், அவர் பணம் தர மறுத்ததுடன் கத்தி கூச்சல் போட்டதால் சீனிவாசனும் அவருடைய நண்பர்களும் சக்திவேலை சரமாரியாக தாக்கிக் கொலை செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை தீர்த்துக்கட்டிய பிறகு சடலத்தை மேட்டுப்பாளையம் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.


இது தொடர்பாக சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் புஷ்பராஜ் (38), திருப்பூர் வெங்கடேசன் (48), முருகபாண்டியன் (37) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். சேலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் நான்கு பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


கடந்த 2018ல் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் வழக்கில், காவல்துறையினர் தீவிர புலனாய்வு விசாரணை நடத்தியதன் மூலம் அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.