Skip to main content

’மரியாதை இல்லாமல் பேசுவது வைகோவுக்கு மரியாதை இல்லை;அவருக்கு நாவடக்கம் தேவை’- எச்.ராஜா பேட்டி

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
r

 

ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவரின் அறுபதாம் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நாமக்கல்லுக்கு திங்கள்கிழமை (டிசம்பர் 3, 2018) வந்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


தமிழகத்தில் கஜா புயலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைவது ஏற்புடைய விஷயம் அல்ல. இதற்கு முன்பு, எந்த ஒரு இயற்கை பேரிடராக இருந்தாலும், மத்திய ஆய்வுக்குழுவினர் விரைவாக வந்ததில்லை. இந்த முறை, புயல் வந்த மூன்றாவது நாளே மத்தியக்குழு வந்தது. ஒரு வாரம் இங்கே இருந்து, பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்துள்ளனர். 


அதுமட்டுமின்றி, வீடுகளை இழந்து தவிக்கும் அனைவருக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உடனடியாக பணிகளை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்ட ஓரிரு நாளில் மத்திய அரசு, அரசாணை வெளியிட உள்ளது. 


கஜா புயலால் மூன்று லட்சம் வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும்கூட, அவர்களுக்கு வீடு கட்ட 6300 கோடி ரூபாய் செலவாகும். இந்த தொகை, நிவாரணத்தில் சேராதா? இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை என்பது அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. 


விழுந்து கிடக்கும் தென்னை உள்ளிட்ட மரங்களை விவசாயிகளுக்கு எந்த ஒரு செலவும் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தில் இருந்தும்கூட தென்னங்கன்றுகளை தருவித்துத் தருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகிய இரு நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. 


இவ்வளவு பெரிய பேரிடரில் இருந்து ஒரே நாளில் மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்? ஒரு லட்சத்து இருபதாயிரம் மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. கொட்டும் மழையிலும், தண்ணீரிலும் மின் ஊழியர்கள் மின் கம்பங்களை போட்டுக்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


67 ஆண்டுகள் காசு சம்பாதிப்பதிலும், போகங்கள் அனுபவிப்பதிலும் செலவு செய்த கமலஹாசன், ஏதோ சினிமா சூட்டிங் போல கீழே விழுந்து கிடக்கும் மரத்தின் மீது காலை வைத்துக்கொண்டு, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று பேசினால் என்ன அர்த்தம்? யார் வஞ்சிக்கிறார்கள்? வாழ்நாள் முழுவதும் மக்களை வஞ்சித்து மோகத்தைக் காட்டி சுரண்டி வாழ்க்கை நடத்திய ஒரு நடிகர் மத்திய அரசை விமர்சிக்கலாமா? இந்த மாதிரியாக எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று இருக்கக்கூடாது.


ஜாக்டோஜியோ அமைப்பினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். ஆறேழு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதித்து இருக்கும்போது மக்களுக்கு சேவை செய்யவில்லை என்றாலும், வேலைநிறுத்தம் என்று அரசாங்கத்தை மிரட்டுவது மனிதாபிமானம் உள்ள செயலா? என்று யோசிக்க வேண்டும். 


கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும்கூட ஸ்டிரைக் செய்வதற்கு இது நேரமில்லை. இப்போது நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய தருணம் இது. மின் இலாகாவைச் சேர்ந்தவர்கள் இராப்பகலாக வேலை செய்து வருகின்றனர். மேற்கு வங்கம், ஆந்திராவில் இருந்தும்கூட மின்துறை ஊழியர்கள் இங்கே வந்துள்ளனர். 


இங்குள்ள அரசு ஊழியர்களை திமுகவும், அக்கட்சியோடு இருக்கும் சில சில்லரை கட்சிகளும் தூண்டிவிட்டதற்கு இவர்கள் ஆளாகிப் போய், ஸ்டிரைக்கை அறிவித்திருப்பது சரியல்ல. ஆகவே ஸ்டிரைக்கை உடனடியாக வாபஸ் வேண்டும்.


என்ன கோரிக்கையாக இருந்தாலும்கூட நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு பேசிக்கலாம். அரசாங்கம் எங்கேயும் ஓடிப்போகப்போறதில்லை. ஆனால் ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோயிலைப் பற்றி எதற்காக தீர்மானம் போடுகிறீர்கள்? உங்கள் கோரிக்கைகளுக்கும், சபரிமலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?


இந்த தீர்மானத்தின் மூலம் ஜாக்டோ ஜியோவில் இவான்ஜலிஸ்டுகளும், நக்சலைட்டுகளும்தான் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அய்யப்பன் கோயிலைப் பற்றி எப்படி தீர்மானம் போடலாம்? கேரளாவில் பிரவன் சர்ச் குறித்த தீர்ப்பு வந்துள்ளது. அதைப்பற்றி ஏன் தீர்மானம் போடவில்லை? கிறிஸ்தவ மதமாற்றும் சக்திகள், நகர்ப்புற நக்சலைட்டுகள் கைகளில் ஜாக்டோஜியோ போய்விட்டது. 


அய்யப்பன் கோயிலுக்கு மாலை போடும் அத்தனை அரசு ஊழியர்களும் இந்து விரோத சக்திகளை விட்டு வெளியே வர வேண்டும். தன்மானமுள்ள இந்துக்கள் ஜாக்டோஜியோவில் உறுப்பினர்களாக இருக்க முடியாது. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஹெச்.ராஜா கூறியது:


கேள்வி: திமுகவுடன் இருக்கும் எல்லா கட்சிகளுமே சில்லரை கட்சிகள்தானா? 


ஹெச். ராஜா: ஆமாம். எல்லா கட்சிகளுமே சில்லரைக் கட்சிகள்தான். திமுக உடன் இருக்கும் கட்சிகளில் எந்த கட்சியாவது மாவட்ட அளவிலாவது இருக்கிறதா? விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடலூரில்கூட இல்லையே. அப்படிப்பட்ட கட்சி சனாதன தர்மத்தை எதிர்த்து மாநாடு நடத்துமாம். அதில் ஸ்டாலின் கலந்துக்குவாராம். அவர்கள் ஒட்டுமொத்தமாகவே இந்து விரோதிகள்தான்.


கேள்வி: வைகோ தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறாரே?


ராஜா: வைகோ, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். மரியாதை இல்லாமல் பேசுவது அவருக்கு மரியாதை இல்லை. அவருக்கு நாவடக்கம் தேவை.  


கேள்வி: கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே?


ராஜா: தானே புயல் பாதிப்புகளை அவருடைய அப்பா போய் பார்த்தாரா? அன்று பேசினீர்களா? அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வந்து பார்த்தாரா? திருப்பிக் கேட்க ஆரம்பித்தால், அவருக்கு தர்ம சங்கடம் ஜாஸ்தியாகி விடும். ஸ்டாலின் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், அதிகமாக மோடிஜியை சீண்டக்கூடாது. 1977 சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், தமிழகத்தை திமுக விஞ்ஞான பூர்வமாக கொள்ளையடித்தது; கோதுமை பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல், அண்ணா மேம்பால ஊ-ழல் என்று எல்லாவற்றையும் பேசுவேன். 


உயிரில்லாத பட்டேலுக்கு சிலை வைத்ததாக கனிமொழி பேசியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு எல்லாம் உயிர் இருக்கிறதா? என்ன பேச்சு இதெல்லாம்? நூற்றுக்கணக்காக பெரியார் சிலை வைத்து வெட்டிச்செலவு ஏன் செய்தீர்கள்? 


கேள்வி: காங்கிரஸ் போல பாஜகவும் மாநிலக்கட்சியாக சுருங்கி விடும் என்று தம்பிதுரை பேசியிருக்கிறாரே?


ராஜா: தம்பிதுரை பாவம். அவர், துணை சபாநாயகர் பதவி பறிபோய்விடும் என்று பயப்படுகிறார். அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்பட வேண்டியதில்லை. அப்படி ஒன்றும் ஆகிவிடாது.


கேள்வி: ராஜஸ்தான் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது?


பாஜக மூன்று மாநிலங்களில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். மற்ற இரண்டு மாநிலங்களில் பாஜக ஆதரவு இல்லாமல் ஆட்சி அமையாது. தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும். கூரை ஏறி கோழியைப் பிடிக்க முடியாத சந்திரபாபு நாயுடுதான் ஸ்டாலினை துணை பிரதமர் ஆக்கப் போகிறாரா?. இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...

Next Story

“பா.ஜ.கவினருக்கு எதையும் நேரடியாக சொல்லும் பழக்கம் கிடையாது” - மாணிக்கம் தாகூர்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress candidate Manikam Tagore says What does Nirmala Sitharaman know in interview for loksabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதியில் ஒன்றான விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி பின்வருமாறு...

காங்கிரஸ்காரர்கள் பா.ஜ.கவை பற்றி மக்களிடத்தில் ஒரு பொய்யான பயத்தை உருவாக்குகிறார்கள் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“திருடப் போகிறவர்களை பிடித்தால் அவர்களிடம் எந்த மாதிரியான பதற்றம் உருவாகுமோ அந்த மாதிரியான பதற்றம் தான் மோடியிடம் இருக்கிறது. குஜராத் மாநிலத்திற்கு சென்றால் அங்கு சிறுபான்மையினர் மக்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 25 வருடமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்பி கூட அங்கு கிடையாது. அங்கு 9 சதவீத சிறுபான்மையின மக்கள் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் கூட இல்லாமல், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் ஒரு கட்சி நடத்த முடியுமா?.ஆனால் அங்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரையில் இதனைத் தொழிலாக வைத்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் இதை அவர்களுடைய கொள்கையாக வைத்திருக்கிறது. சிறுபான்மை மக்களை ஓரங்கட்டி, அவர்களை நிராயுதபாணியாக ஆக்க வேண்டும், அவர்களை கேவலப்படுத்த வேண்டும், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் வேலை”.

தென்மாநிலங்களில் வெற்றி பெறும் காங்கிரஸ் கூட்டணி வட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஏன் வெற்றி பெற முடியவில்லை?

“காங்கிரஸினுடைய மொத்த அரசியலுமே ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் பாஜக, ஆங்கிலயேர்களுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் முகலாய படையெடுப்புகளை மையமாக வைத்து தான் அவர்களுடைய அரசியல் இருந்திருக்கிறது.  வட மாநிலங்களில் ஆங்கிலேயர்கள், இந்து - முஸ்லிம்  மக்கள் இடையே பல காலமாக விரிசலை கொண்டு வந்தார்கள். இந்து - முஸ்லிம் கலவரங்கள் நிறைய நடந்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தான் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வருகிறது.

100 வருடத்திற்கு முன்பாக இந்து மக்களை மையப்படுத்தி தான் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வந்தது. அதற்கேற்றார் போல் இந்தியா- பாகிஸ்தான் பிரிகிறது. அப்பொழுது இங்கு இருக்கக்கூடிய இந்து மக்கள் அகதிகளாக அங்கு செல்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள் இங்கு அகதிகளாக வருகிறார்கள். இந்த அரசியல் களம் அவர்களுக்கு நல்ல களமாக அமைந்துவிட்டது.

ஆனாலும் 1947 இல் இருந்து 1967 வரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் நடந்த உட்கட்சி பூசலால் அங்கிருந்த முக்கிய தலைவர்கள் அங்கிருந்து பிரிந்து புதிதாக கட்சி தொடங்கினர். அந்தக் கட்சியோடு சேர்ந்து ஜன சங்கம் என்ற கட்சியை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி உள்ளே நுழைந்து ஆட்சி அமைத்து எழுபதுகளில் முதல் தடவையாக பாஜக அரசியலில் வருகிறது. அரசாங்கத்தில் அவர்கள் நுழைந்தவுடன் அனைத்தையும் கண்ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை பொருத்தவரை மாநிலக் கல்வி துறைகளில் மிகப்பெரிய ஊடுறவுகள் வந்திருக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதி வந்திருக்கிறார்கள். வரலாற்றை மாற்றுவதை அவர்கள் பலகாலமாக முயற்சி செய்து வருகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, திருவள்ளுவருக்கு திடீரென்று காவி கலரை போட்டுவிட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, வரலாற்றை திரித்து சொல்வது தான். அவர்கள் வடமாநிலங்களில் மத துவேசத்தை நார்மல் செய்து விட்டார்கள். பாஜக காரனுக்கும் ஆர்.எஸ்.எஸ் காரணுக்கும் என்றைக்குமே அவர்களுடைய கருத்தை நேரடியாக சொல்கிற பழக்கமே கிடையாது. எடப்பாடி பழனிசாமி மூலமாகவோ, ஜெயலலிதா மூலமாகவோ தான் வருவார்கள். மற்றவர்களின் தோளில் ஏறி நான் நல்லவன் என்ற கதையைச் சொல்லிதான் வருகிறார்கள்”.

காங்கிரஸ் செய்த தவறுகளை 10 வருடத்தில் நாங்கள் சரி செய்து விட்டோம் என்று கூறுகிறார்களே? 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம் என்றும் கூறுகிறார்களே?

“ஒரு சிலரை மட்டும் பணக்காரர்களாக்கி மொத்த ஊர்களையும் ஏழ்மையாக்கி வைத்திருக்கிறார்களே. கடந்த வருட டேட்டாவை எடுத்துப் பார்த்தால் 62% வேலையாக கொண்டாட்டம் இந்தியாவில் இருக்கிறது என்று கூறுகிறது. இதற்கு யார் காரணம்? அதானியையும், அம்பானியையும் மட்டும் பணக்காரர்களாக உருவாக்கி இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டது என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை”.

வளர்ச்சி.., வளர்ச்சி...,வேண்டும் மீண்டும் மோடி என்று சொல்லி பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் இந்த மாதிரியான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது?

“அவர்கள் சொல்கிற வளர்ச்சி, அதானியுனுடைய வளர்ச்சியை மட்டும்தான் அவர்கள் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி அதானி, வளர்ச்சி அம்பானி என்பதுதான் அவர்களது உண்மையான கொள்கை. விவசாயிகள் பிரச்சனையில் இருக்கிறார்கள். விவசாயிகளின் நிலைமை மிகவும் கொடுமையாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தலை விரித்து ஆடுகிறது. சிறுகுறு தொழில்கள் ஜிஎஸ்டி வரியினால் அழிந்து போய்விட்டது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து”.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பும், பின்பும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து தி.மு.க.வையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? களம் எப்படி இருக்கிறது?

“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல தேர்தல் வரும் முன்னே மோடி வருவார் பின்னே என்ற கதைதான். எப்போது தேர்தல் வருமோ, அப்போது தமிழ்நாட்டுக்கு ஓடி வருவார். வந்து வாயில் வடை சுடுவார்.  அனைத்து கதையும் சொல்லிவிட்டு போய்விடுவார். சென்னை வெள்ளம் வந்த போதும் தென்மாநிலங்களில் நிகழ்ந்த வெள்ளத்தின் போதும் என்ன செய்தார்? முதலில் அவர் காது கொடுத்து கேட்டாரா?. அந்தச் சமயத்தில் நிதியமைச்சரை அனுப்புகிறார்கள். நிதியமைச்சருக்கு என்ன தெரியும், பாவம். நிர்மலா சீதாராமனை பார்த்தால் பாவமாக தெரிகிறது” என்று கூறினார்.