Skip to main content

வெளியே பவர்பேங்க்! உள்ளே களிமண்!; நூதன மோசடியில் இருவர் கைது!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

கன்னியாகுமரியில் ஐயப்ப சீசன் காரணமாக அதிகரித்து வரும் சுற்றப்பயணிகளிடம் போலி பவர்பேங்க் விற்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுவும் அவர்கள் விற்ற அந்த போலி பவர்பேங்க்கின் உள்ளே எடைக்காக களிமண் நிரப்பப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 PowerBank out! Inside clay! Two arrested in a scandal

 

தற்போது ஐயப்ப சீசன் என்பதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அப்படியே கன்னியாகுமரிக்கும் சென்று சுற்றுலா செல்வது வழக்கம். இந்நிலையில் இப்படி சுற்றுலா பயணத்தின் போது கன்னியாகுமரி வந்த ஒரு ஐயப்ப பக்தர் சாலையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் குறைந்த விலையில் விற்கப்பட்டு கொண்டிருந்த பவர்பேங்க்கை வாங்கியுள்ளார். அந்த பவர் பேங்க் மூலம் மொபைலுக்கும் சார்ச் போட்டுள்ளார். மொபைலும் சார்ச்சாகியது. ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து மொபைல் சார்ச்சாகவில்லை ஆகவே அந்த பவர் பேங்க்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே ஒரு சிறிய பேட்டரி பொருத்தப்பட்டு எடைக்காக களிமண் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்த அவர் அதனை சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டார்.

 

 PowerBank out! Inside clay! Two arrested in a scandal

 

 

 

 PowerBank out! Inside clay! Two arrested in a scandal

 

 

 PowerBank out! Inside clay! Two arrested in a scandal

 

இந்த வீடியோ கன்னியாகுமரி போலீசாரின் கவனத்திற்கு செல்ல, இதுதொடர்பாக போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பவர் பேங்க் வியாபாரம் செய்துகொண்டிருந்த இருவரை பிடித்து அவர்கள் விற்பனைக்கு வைத்திருத்த பவர் பேங்க்கை ஓபன் செய்து பார்த்தபோது அவை அனைத்தும் களிமண் அடைக்கப்பட்ட போலி பவர்பேங்க் என தெரியவந்தது. இந்த நூதன மோசடியில் கேரளாவை சேர்ந்த சித்திக், பெங்களூருவை சேர்ந்த சபிபுல்லா ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார்.  விற்பனைக்கு வைத்திருந்த நூற்றுக்கணக்கான போலி பவர்பேங்குகள், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.