Skip to main content

போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது தாக்குதல்; நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!

Published on 17/04/2018 | Edited on 17/04/2018
car glass


சென்னை தியாகராயர் நகரில் போலீசாரின் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராயர் நகர் பேருந்து நிலையம் எதிரே மாம்பலம் போலீசார் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில நபர்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதை கண்ட காவலர்கள் தப்பியோடியவர்களை உடனடியாக துரத்தி சென்றனர். இதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து தப்பிச்சென்ற மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

karthi


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக் என்றும் அவர் வைத்திருந்த அடையாள அட்டை மூலம் கார்த்திக் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கார்த்தி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடிவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்