Skip to main content

நகைகொள்ளை வழக்கில் போலீஸ் பிஸி;கடத்தல் ஆசாமி ஜாலி உலா!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி.சாலையில் உள்ளவர் சோமசுந்தரம் என்கிற வணக்கம் சோமு. இவர் முன்னாள் மலைக்கோட்டை பகுதியின் அதிமுக பொருளாளர் . இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறர்.

இந்த நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் மகாலட்சுமி என்பவரை ஒருதலையாக காதலித்துள்ளார் திருமணத்திற்கு அவர் மறுக்கவே அவரை கட்டாயமாக கடத்தி திருமணம் செய்ய வணக்கம் சோமு முடிவெடுத்து இதற்காக கடந்த 30 ஆம் தேதி தோழி ஹேமாவுடன் பேராசிரியை மகாலட்சுமி நடந்து சென்ற போது சோமு தனது கார் டிரைவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் வேனில் பேராசிரியரை கடத்தினார் .

 

police


திருச்சி மதுரை சாலையில் உள்ள துவரங்குறிச்சி அருகே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மகாலட்சுமியை இறக்கிவிட்டு வணக்கம் சோமு மற்றும் அவர் நண்பர்கள் தப்பினர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் நாஞ்சிக்கோட்டை சார்ந்த அலெக்ஸ் மற்றும் தஞ்சையைச் சார்ந்த மரிய பிரகாஷ் மற்றும் கார் டிரைவர் கீழே கல்கண்டார் கோட்டையை சார்ந்த விக்னேஷ் ஆகியோரை கைது செய்து கைதான மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வணக்கம் சோமு போலீஸ் கையில் கிடைக்காமல் டிமிக்கி கொடுத்து கடந்த 20 நாட்களாக தலைமறைவாக உள்ளார். மேலும் தலைமறைவாக வணக்கம் சோமு மற்றும் அவர் நண்பர் ஜெயபால் மற்றும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். மதுரை குற்றாலம் சென்னை கேரளா திருப்பதி என போலீஸ் போக்கு காட்டிய போலீசார் பிடிக்காமல் தண்ணி காட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது திருச்சி பகுதியிலேயே டூவீலரில் வலம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

police


இதற்கிடையே பேராசிரியை மகாலட்சுமியை காரில் கடத்தி சென்றவர்கள் மூன்று பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . தன்னை கடத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டும் வகையில் 19.10.2019 அன்று திருச்சி சிறைச்சாலையில் அணிவகுப்பு நடைபெற்றது. கைதிகள் பலரும் வரிசையாக நிற்க வைத்தனர். இதில் தன்னை கடத்தியவர்கள் யார் என பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் சிறைக்குச் சென்று பேராசிரியர் அடையாளம் காட்டினார்.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய் மனுவை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதே நேரத்தில் திருச்சியில் லலிதா ஜீவல்லரி நகைக்கொள்ளை வழக்கு கோட்டை காவல்நிலைய எல்லைக்குள் நடைபெற்றதால் போலீசார் அனைவரும் இந்த கொள்ளை வழக்கிலே ரொம்ப பிஸியாக இருப்பதால் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வணக்கம் சோமு தலைமறைவாக இருந்தவர் தற்போது திருச்சி சத்திரம் கடைவீதிகளில் டூவிலரில் சுற்றிக்கொண்டிருக்கிறார். இதை லோக்கல் போலீசும் கண்டுக்காமல் இருக்கிறார்களாம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.