அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெறுகிறது. எடப்பாடி அணியின் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி தினகரன் அணியின் வெற்றிவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று இரவு 7.15க்கு தீர்ப்பு வெளியிடப்படுமென அறிவித்துள்ளனர்.
காலையின் வெற்றிவேலின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளூபடி செய்யப்பட்டது. தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார்.