மகன் திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளான தாய் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா. இவர் காசிமேடு பகுதியில் உள்ள பவர்குப்பம் என்ற இடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்திரா கடந்த ஞாயிறு அன்று நள்ளிரவு தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 70 சதவிகிதத்திற்கும் அதிகமான காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக மகன் திட்டியதால் தாய் இந்திரா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.