Skip to main content

பாலியல் தொல்லை... மான்கராத்தே திரைப்பட நடிகை போலீசில் புகார்!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

 

சின்னத்திரையிலும், சினிமாவிலும் சிறு வேடங்களில் நடித்து வந்தவர் சமிக்சா. மான்கராத்தே படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டு குழந்தைகளுடன் சென்னை கிழக்கு முகபேரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சொந்தமாகவும் செனாய் நகரில் அழகு நிலையம் நடத்திவருகிறார். 

 

 police

 



இந்த நிலையில் சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் அவர் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று எனது இரண்டு ஆண் பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் எனக்கு பல வகையிலும் பிரச்சனை ஏற்பட்டது. 
 

பெண்கள் அழகு நிலையம், யோகா பயிற்சி கலையை வைத்து சொந்தமாக கிளினிக் நடத்தி வந்தேன். சின்னத்திரை மற்றும் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடத்து வந்தேன். இப்படிப்பட்ட நேரத்தில் சரவணன் சுப்பிரமணி என்பவர் என்னிடம் அறிமுகமாகி பழகினார். என்னை திருமணம் செய்தாக கூறினார். கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டோம். 

 


 

2015ம் ஆண்டு கருவுற்றேன். உடனே சரவணன் எனக்கு அபார்ஷன் செய்துவிட்டார். தொடர்ந்து ஆறு முறை கருவுற்றும் என்னை அடித்து துன்புறுத்தி அபார்ஷன் செய்துவிட்டார். அதன் பிறகு பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். 2016ல்தான் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. இதுபற்றி கேட்கும்போது, முதல் மனைவிக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னார். ஆனால் நாளடைவில் இதுபற்றி விசாரிக்கும்போது அவர் தனது முதல் மனைவியை பிரியவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் எனது பிள்ளைகளோட தனியாக வசிக்க வந்துவிட்டேன். 
 

தொடர்ந்து எங்கு சென்றாலும் என்னை தொடர்ந்து வந்து என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று அடியாட்கள் மூலமாக தொடர்ந்து என்னையும் எனது மகன்களையும் மிரட்டி வருகிறார். பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதுவரை ஆறு முறை நான்  என் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். சரவணன் சுப்பிரமணியும், அவரது முதல் மனைவியும் பல பெண்களை இப்படி ஏமாற்றியுள்ளார் என்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சமிக்சா. இது தொடர்பான விசாரணையை  இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரித்து வருகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.