Skip to main content

ஜெயலலிதா போல கொண்டை போட மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்களை... அமைச்சர் பேச்சு...

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
mr vijayabaskar




கரூர் அடுத்த தளவாபாளையத்தில் அமமுக-வில் இருந்து விலகியவர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
 

அப்போது விஜயபாஸ்கர் பேசுகையில், இப்போ கலைந்து விடும், அப்போ கலைந்து விடும், அதிமுக ஆட்சி ஒரு அமாவாசைக்கு தாங்காது என்று எத்தனையோ பேர் சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி இந்த ஆட்சி தொடருகிறது. 

 

ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை. பிறகு ஏன் அவர் சொத்து சேர்க்க வேண்டும். மன்னார்குடி கும்பல் ஜெயலலிதா வீட்டில் முகாமிட்டு சொத்துக்களை வாங்கி குவித்தது. அவர்கள் செய்த இந்த காரியத்தால்தான் ஜெயலலிதா சிறைக்கு போகும்நிலை ஏற்பட்டது. 

 

ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரது பூத உடல் எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த நிலையில் மும்பையில் இருந்து விமானத்தில் பிரபல மேக்கப் கலைஞர்களை வரவழைத்து ஜெயலலிதா போல கொண்டை போட செய்து, ஜெயலலிதா போல க்ளோஸ் நெக் ஜாக்கெட் தைத்து போட்டுக்கொண்டு ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள். அவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். 

 

ஜெயலலிதா இறந்துவிட்டாலும் அவருக்கு துரோகம் செய்தவர்களை, ஜெயலலிதா ஆன்மா பிடித்து பெங்களூரு சிறையில் தள்ளியது. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை அவரது ஆன்மா மன்னிக்காது. இவ்வாறு பேசினார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்; எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Case registered against ADMK M.R.Vijayabaskar for threatening election officer

கரூர் மாவட்டத்தில் தாந்தோனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் வினோத்குமார், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும் வீடியோ பதிவுகள் செய்யவும், VST Team 1 ன்  அதிகாரியாக கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால்  நியமனம் செய்யப்பட்டு  தேர்தல் பணியை  மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பணிக்காக  அரசு வாகனம்  வழங்கப்பட்டு, ஓட்டுநராக கங்காதரன், வீடியோ கிராஃபர் வீடியோ கேமராவுடன்  வழங்கப்பட்டு தேர்தல் பணியை செய்து வருகிறார்.

கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மார்ச் 31ஆம் தேதி அதிமுக கட்சியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளர் தங்கவேல் என்பவருக்கு தெருமுனை தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டி,  மண்மங்கலம் தாலுகா கரைப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கார்த்திக் என்பவர் அனுமதி கேட்டு மனு செய்திருந்த நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் மார்ச் 31ஆம் தேதி காலை முதல் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர்  தங்கவேல் என்பவருடன் அவரை ஆதரித்து,  முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர், விஜயபாஸ்கர்,  அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் , அதிமுக கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன்  வேலாயுதம்பாளையம், கார்த்திக்  கரைப்பாளையம், ஜெகன் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்துடன் தெருமுனை பிரச்சாரம் செய்து வந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்படி, தெருமுனை பிரச்சாரத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சமார் 10 கார்களுக்கு மேல் வேட்பாளருடன் தெருமுனை பிரச்சாரத்திற்கு அணிவகுத்து வந்தது. அப்போது நெரூர் அருகே உள்ள அரங்கநாதன்பேட்டை என்ற ஊரில் தெருமுனை பிரச்சாரத்தின்போது ஜெகன் என்பவரிடம் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும்படியும், வாகனங்கள் அணிவகுத்து வர தேர்தல் விதிமுறைப்படி அனுமதி இல்லை என்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் கூறியுள்ளார் .

அதனை தொடர்ந்து மதியம் 02.45 நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேல் தேர்தல் பிரச்சார வாகனங்களுக்கு பின்னால்  தேர்தல் கண்காணிப்பு குழுவுடன் அரசு வாகனத்தில் சென்றபோது, கரூர் மாவட்ட அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தின் முன்பு சட்டவிரோதமாக ஒன்று கூடி, வழிமறித்து தேர்தல் பணியை செய்ய விடாமல் தடுத்து வாகனத்திற்குள் இருந்த தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரி வினோத்குமாரை பார்த்து, " நீ ஓவரா பண்ற"," வண்டிய தேக்குயா பார்க்கலாம்", என்றும், "யோவ் என்றும் ஓவரா ரூல்ஸ் பேசுகிறாய்" என்றும், "கேஸ் தான போடுவ போட்டுக்கோ" என ஒருமையில் பேசியுள்ளனர். மேலும் ரமேஷ்குமார் என்பவர் வினோத் குமாரை ஆபாசமாக பேசியும் வாகனத்தை சூழ்ந்துகொண்டும் வீடியோ கிராஃபர் ஹரிஹரன் என்பவரை வீடியோ பதிவு செய்ய விடாமல் தடுத்தும்,  கொன்னுருவோம் என கொலை மிரட்டல் விடுத்ததோடு அனைவரும் வினோத்குமாரை  தாக்க முற்பட்டனர்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் அவர்களிடமிருந்து பாதுகாப்பாக தன்னை மீட்டதாக வினோத்குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் வினோத் குமார் அளித்த புகார் அடிப்படையில் , முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.