Skip to main content

வேட்டை நாய் மூலம் முயல், அணில், காடையை வேட்டையாடிய 7 இளைஞர்கள் கைது!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

karur district persons police


கரூரில் முயல், அணில், காடை, போன்ற விலங்குகளை வேட்டையாடி குவியலாக வைத்து பின் சமைத்துச் சாப்பிடுவது போன்று புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது வனத்துறை மற்றும் காவல்துறையினருக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் அந்தப் படங்களை யார் பதிவேற்றம் செய்தது? என்பது குறித்தும், இந்தக் கும்பல் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் கரூர் மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன், மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்கத் துவங்கினர். விசாரணையில் கரூர் மாவட்டம் மண்மங்கலம், அருகே ஆத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் என்பது உறுதியானது.

இதையடுத்து வனத்துறையினர் அங்குச் சென்று சந்தோஷைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சந்தோஷூம், அவர் நண்பர்களும் வேட்டை நாய் மூலம், காட்டுப்பகுதியில் அணில், முயல், காடை, போன்ற விலங்குகளை வேட்டையாடி, அவற்றை அங்கு உள்ள விடுதியில் வைத்து சமைத்து சந்தோஷமாக ஆடிபாடி உள்ளனர். இதை அவர்கள் செல்போனில் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வெளியிட்டோம் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp


அதனைத் தொடர்ந்து சந்தோஷ், மணிகண்டன், தீனதயாளன், அஜித், வீரக்குமார். மார்டின், சித்தார்த், உள்ளி்ட்ட எழு பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடுவது குற்றம், அவ்வாறு வேட்டையாடுபவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம், 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.