ஜெ. மணல் சிற்பம்-செப்.1ல் தீர்ப்பு!
கன்னியாகுமரி வடசேரி நெடுஞ்சாலையில் அதிமுக பிரமுகர் விஜயகுமாரால் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மணல் சிற்பம் உள்ளது. இதற்கு கூரை மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை நடுவில் மணல் சிற்பம் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, சிற்பத்தை அகற்றக்கோரி திமுக நிர்வாகி மகேஷ் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 1ம் தேதியில் தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.