Skip to main content

3 வருடம் வராத நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க? அமைச்சரையும் வேட்பாளரையும் விரட்டிய கிராமமக்கள் !!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019


 

திருச்சி எம்பி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மணிகண்டம் ஒன்றிய பகுதியில் அதிமுக கூட்டணியை சார்ந்த தேமுதிக வேட்பாளர் தர்மபுரி டாக்டர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் வளர்மதி மற்றும் கூட்டணி கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

 

வ்

மாலை நேரத்தில் முடிகண்டம், மேக்குடி, துறை குடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று விட்டு பின்னர் அளுந்தூர் ஊராட்சியை சார்ந்த செவ்வந்தியாணிபட்டி என்ற கிராமத்திற்கு இரவு எட்டு மணி போல் சென்றனர்.   அப்போது அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மற்றும் அமைச்சர் ஆகியோர் ஓட்டு கேட்டு வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் அவர்களுக்காக காத்திருந்தனர்.

 

ஊருக்குள் நுழைந்த அமைச்சர் வளர்மதி காரிலிருந்து கீழே இறங்கிய உடன் திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டு இங்கு கிராமத்தில் அனைவரும் கடந்த ஒரு வருடமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.    எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளே இல்லை கஜா புயலால் செவ்வந்தியாணிப்பட்டி கிராமம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.

 

கடந்த 3 ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு அமைச்சராகி நீங்கள் ஒருமுறை கூட வரவில்லை . இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள் உங்களுக்கு நாங்கள் ஓட்டுப் போட மாட்டோம்.   அதனால் இந்த கிராமத்தை விட்டு திரும்பிச் செல்லுங்கள் என்று பொதுமக்கள் ஆவேசமாய் கூறினார்கள். கிராமத்து மக்களின் ஆவேசத்தை பார்த்த உடன் வந்த அதிமுகவினர் பொதுமக்களை அமைதிப்படுத்த முயன்றார்கள்.

 

ஆனாலும் பொதுமக்கள் தொடர்ச்சியாக அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் அவரை முற்றுகையிட முயன்றதால் அவர்களால் பொதுமக்களை அமைதிப்படுத்த முடியவில்லை.  இதையடுத்து அமைச்சர் வளர்மதி மற்றும் வேட்பாளர் ஆகியோர் இறுகிய முகத்துடன் அங்கிருந்து வெளியேறினர். திருச்சியில் முதல் முறையாக பொதுமக்கள் ஆவேசமாக அமைச்சரை திருப்பி அனுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.