Skip to main content

சிறுவனுக்கு பாலியல் கொடுமை!! மருத்துவமனையில் சிகிச்சை...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
incident in thanjai

 

 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தனது நண்பர்களுடன்  கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு சென்ற சிறுவனை, அதே பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சக்திவேல் (28) என்பவர் சிறுவனை வீட்டிற்குள் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

 

சிறுவன் மறுத்தபோது, உனது குடும்ப பெண்களின் படங்களை ஆபாச படங்களாக இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி வற்புறுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிறகு அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுவன் சக்திவேல், வீட்டில் நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியுள்ளான். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்யவில்லை.

 

incident in thanjai

 

இந்த நிலையில் சக்திவேல் தாக்கியதாலும் கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை பெற்றோர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், சிறுவன் சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், பேராவூரணி காவல்நிலையத்தில் திங்கள்கிழமை மீண்டும் புகார் அளித்துள்ளனர். மேலும், சக்திவேல் தங்களை மிரட்டி, தங்கள் குடும்ப பெண்களை மார்பிங் செய்து, ஆபாசமாக முகநூலில் பதிவேற்றம் செய்வதாக அச்சுறுத்துவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்தார். புகாரை பெற்ற பேராவூரணி போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய வேன் ஓட்டுநர் சக்திவேலை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.