Skip to main content

எடப்பாடி நிகழ்ச்சிகளில் ஜேப்படி!-கோஷம் போடுபவர்களிடம் கைவரிசை!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

முன்புபோல் கிடையாது. ஜெயலலிதா ரேஞ்சுக்கு தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்வதில் இப்போது ஆர்வமாக இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதுபோல், வழிநெடுகிலும் அதிக அளவில் காக்கிகளை நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதனால், வெளியூர் ஆட்களைத் திரட்டிவந்து கெத்து காட்டுகிறார்கள் அடிபொடிகள்.  

 

incident in chief minister function



இந்த விதத்தில் கூட்டம் சேர்க்கும்போது, சில ஜேப்படி திருடர்களும் ஊடுருவி கைவரிசை காட்டிவிடுகிறார்கள். இப்படித்தான் பெரியார் பிறந்தநாளான 17-ஆம் தேதி, ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செய்து, அதன் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் முதல்வர் இ.பி.எஸ்.ஸும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தி.நகர் அதிமுக பிரமுகர் ஒருவரின் பக்கத்தில் நின்ற ஆசாமி, ரூ.16,000-ஐ பிக்பாக்கெட் அடித்தார். அதை அருகிலிருந்த ஒருவர் கவனித்துவிட்டார்.  அந்த நபரைக் கையும் களவுமாகப் பிடித்து காக்கிகளிடம் ஒப்படைத்தனர்.

முதல்வரும், துணை முதல்வரும் பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவியபோது, 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அத்தனை கெடுபிடிகளையும் தாண்டி ஜேப்படி செய்த அந்த பலே ஆசாமியை,   தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றனர். அப்போது அந்த ஜேப்படி ஆசாமி “கட்சி கரை வேட்டி கட்டிக்கிட்டு கூட்டத்தோடு கூட்டமாக பலரும் கோஷம் போடுறப்ப.. நானும் கோஷம் போட்டுக்கிட்டே செல்போன், பணம்னு கைக்கு சிக்கியதை அபேஸ் பண்ணிருவேன்.” என்றிருக்கிறார்.

ஜெமினி மேம்பாலம் பெரியார் சிலை அருகில் தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில்  ஜேப்படி செய்த முருகன் பிடிபட்டபோது “நம்ம கட்சி தலைமை அலுவலகத்திலும் இதேபோல் ரெண்டு பேரைப் பிடித்துக் கொடுத்தோம். இப்போதும், அதேமாதிரி ஒருவன் சிக்கியிருக்கிறான்.” என்று முணுமுணுத்துவிட்டுச் சென்றார் ஒரு அதிமுக தொண்டர்.  

தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், தி.நகர் அதிமுக 114-வது வட்ட செயலாளர் சின்னையாவிடமிருந்து ரூ.16000-ஐ பிக்பாக்கெட் அடித்தவர் கோவை – சீத்தாநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் முருகன் என்பது தெரிய வந்திருக்கிறது.

தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், திரட்டப்படும் கூட்டத்தில் ஜேப்படி ஒருபுறம் நடக்கிறது என்பது எடப்பாடிக்குத் தெரியுமா? இதற்குமுன், அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்ட காக்கிகள், முருகன் விஷயத்திலோ கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.