Skip to main content

ஆண்மை இல்லாதவர் என கூறிய மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கணவன்..!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
images


ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த விபாவாசு (32). இவருக்கும், சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்தவர் அனுஷா (27) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அனுஷா கொடுங்கையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் இரண்டு குடும்பத்தினரும் அவர்களை சேர்த்து வைக்க பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர் வீட்டிலேயே இருக்கும் அனுஷா, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனது கணவர் விபாவாசுக்கு ஆண்மை இல்லை என்று குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து தனது உறவினர்களிடமும் அனுஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

 

இதனால் அனுஷாவின் உறவினர்கள் விபாவாசு பற்றி பல இடங்களில் தவறாக பேசியுள்ளனர். இதை அறிந்து ஆத்திரம் அடைந்த விபாவாசு, தான் மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்துள்ளார். அந்த ஆபாச வீடியோவை அனுஷாவின் அப்பா, மற்றும் அவரின் உறவுப்பெண் ஒருவருக்கு செல்போன் மூலம் அனுப்பினார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், இதுகுறித்து எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் ஐதராபாத்துக்கு நேரில் சென்று விபாவாசுவை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தி செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அவர் ஆபாச படம் அனுப்பியது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபாவாசுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்