Skip to main content

ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டே நாள்... லஞ்ச ஒழிப்புத் துறையால் பெண் அதிகாரி கைது!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலராக பணி செய்து வந்தவர் ஜெயபிரபா (58). இவர் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் பணி செய்து வருகிறார். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

Government Woman officer arrested

 



கோவிந்தராஜ் என்பவர் தனது உறவினர் பெண்ணுக்கு திருமண உதவி திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக முறைப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். பொதுவாக இதுபோன்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இருந்தாலும் அந்த விண்ணப்பத்தின் பேரில் சம்பந்தப்பட்ட மணமகன் மணமகள் வீட்டாருக்கு சமூக விரிவாக்க அலுவலர்கள் வீட்டுக்கு வந்து விசாரணை செய்து உதவித்தொகை கிடைக்க உறுதி சான்று அளிப்பது வழக்கம். இவர்கள் உறுதி சான்று எடுத்து பரிந்துரை செய்த பிறகே அரசு நிதி உதவியை வழங்கும். 

இதை பயன்படுத்தி தமிழகத்தில் பெரும்பாலான சமூக விரிவாக்க அலுவலர்கள் மணமகள் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதிலும் இந்த ஜெயபிரபா இரண்டு நாட்களில் ஓய்வு பெறும் நிலையில் இருந்ததால் கடந்த சில மாதங்களாகவே தீவிரமான வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இதற்காகவே திருமண உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீடு வீடாக சென்று விசாரணை என்ற பெயரில் அவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் நோக்கில், மண்டபத்தில் திருமணம் நடைபெற்று இருந்தால் நீங்கள் வசதியானவர் உங்களுக்கு எப்படி உதவி தொகை கிடைக்கும் என்று பல்வேறு முரணான கேள்விகளை கேட்டு பெண்ணின் பெற்றோர்களை திணறடித்து, அதையெல்லாம் சரி செய்து தருவதாக கூறி குறைந்தபட்சம் ரூ. 3000 மேல் பணம் பறித்து வந்துள்ளார்.  

 



இந்நிலையில் கோவிந்தராஜ் என்பவர் ஜெயபிரபாவின் அதிரடியான பேரம் பேசி பணம் கேட்டதை பொறுக்கமுடியாமல் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து கோவிந்தராஜ் திருமண உதவித் தொகைக்காக ஜெயபிரபாவிடம் லஞ்சம் கொடுப்பதை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.இந்த செய்தி விருத்தாசலத்தில் மட்டுமல்ல தமிழகம முழுவதும் பரபரப்பாகியுள்ளது.  

ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பது என்பது இப்போதுள்ள விலைவாசியில் எவ்வளவு பெரிய சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அரசு திருமண உதவி திட்டம் மூலம் கொடுக்கும் தொகை அப்படி பட்ட பெற்றோர்களுக்கு அவர்கள் செய்யும் செலவில் சிறிதளவு ஈடுகட்ட முடியும் என்பதால் அரசுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அங்கேயும் பணம் வசூலிக்கப்படுவது வேதனைக்குரியது. இந்த கைது சம்பவம் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர் அலுவலகங்களிலும் இதுபோன்ற சமூக விரிவாக்க அலுவலராக உள்ள பெண்களின் ஈவிரக்கமற்ற வசூல் வேட்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா? என்று பொருத்திருந்து பார்க்கலாம். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்