Skip to main content

வாக்கு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடிய அதிமுக கவுன்சிலர்... துரத்தி பிடித்த போலீஸ்!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மூலம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் யூனியன் சேர்மன், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல்கள் இன்று 27 மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான அதிமுகவினர் பல்வேறு இடங்களில் வன்முறையும் எதிர்க் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதும், மிரட்டியதும் என மறைமுகத் தேர்தல் வெளிப்படையாகவே அலங்கோலமாக நடந்தது.

 

 AIADMK councilor running away with ballot box ... chasing police!


இதில் உச்சகட்டமான ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 8 ஒன்றியங்களையும், திமுக 4 இடங்களையும் கைப்பற்றியது. ஈரோடு யூனியன் சேர்மன் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இங்கு இரு கட்சிகளும் சமநிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் ஏற்கனவே கடத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று வாக்களிக்க வரவில்லை இதனால் ஈரோடு யூனியன் சேர்மன் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட இன்னொரு யூனியன் தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் தலைவர் பதவிக்கு, தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் கவுன்சிலர்களின் வெற்றிபெற்றவர்கள் அதிமுகவினர் மூன்று பேர் மட்டுமே, மீதி 10 பேர் திமுகவினர்தான். ஆக இங்கு மெஜாரிட்டியாக திமுக வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில் இன்று காலை தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு உறுப்பினர்களும் திமுக சார்பில் தலைவர் பதவிக்கு நின்ற வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டு வந்தனர். திடீரென எழுந்த அதிமுக கவுன்சிலர் நடராஜ் என்பவர் தேர்தல் அதிகாரி வசம் இருந்த ஓட்டுச் சீட்டுகளை கிழித்துப் போட்டுவிட்டு அங்கு இருந்த வாக்கு பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் பிடி பிடி பிடி என சத்தம் போட்டு அவரை துரத்திக்கொண்டு ஓடினார்கள். கடைசியில் போலீசிடம் மாட்டினார்.  அதிமுக கவுன்சிலர் நடராஜ் அதற்குள் அந்த வாக்குப் பெட்டியில் இருந்த ஓட்டுக்களை எல்லாம் கிழித்துப் போட்டு விட்டார்.  இதனால் அந்த இடம் பதட்டமாக மாறியது.

இதை சாக்காக வைத்து தேர்தல் அதிகாரி தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் சேர்மன் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்து விட்டார். ஒரு அதிமுக கவுன்சிலர் வாக்குப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடியது அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பாகவும், கேலியாகவும் பேசப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.