நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் நாளை நடைபெறுகிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்ளும் கலந்துகொள்கிறார்கள்.
இந்நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.
நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. கூட்டம் முடிந்ததும், பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பும் பழனிசாமி, நாளை இரவு தமிழகம் திரும்புகிறார்.