Skip to main content

அரிசி, பருப்பு வாங்கவே ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்.. பரிதவிப்பில் மலை மக்கள்!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சத்தியமங்கலம் மலை பகுதியும் வடக்கு பகுதியில் அந்தியூர் மலை காடுகளும் உள்ளது. சந்தன வீரப்பன் உலாவிய இந்த மலையின் நீளம் இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர். இதில் நூற்றுக்கணக்கான குக்கிராமங்களும் ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களும் வசிக்கிறார்கள் அப்படியுள்ளதுதான்.

அந்தியூர் மலைப்பகுதியில் உள்ள பர்கூர் மலை, பர்கூர் மேற்கு மலைப்பகுதியில்  ஒன்னகரை, தம்புரெட்டி, ஒசூர், கோயில் நத்தம், செங்குளம், சின்ன செங்குளம், கொங்காடை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருக்கிறது.  இங்குள்ள மலைவாழ் மக்கள் உணவு பொருள், மருத்துவ வசதிக்கு கீழ் பகுதியான அந்தியூர் தான் செல்ல வேண்டும் அடர்ந்த வனப்பகுதி குக்கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து தாமரைக்கரை என்ற இடத்தில்  பஸ் ஏறி அந்தியூர் சென்று வந்தனர்.  தங்களது கிராமத்திற்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என சென்ற  ஐம்பது ஆண்டுகளாக அரசு நிர்வாகத்திடம்  வலியுறுத்தி கேட்டார்கள். பல போராட்டங்களும் நடத்தினார்கள் சென்ற ஆண்டு மக்கள் கோரிக்கையை ஏற்று  அரசு பஸ் இக்கிராமங்களுக்கு  இயக்கப்பட்டது. 

 

 Fifty kilometers walk to buy rice and legumes ..

 

இது மலைவாழ் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது.  இந்த நிலையில் தாமரைக்கரை கிராமத்திலிருந்து தாளகரை கிராமம் பிரிவு வரை 15  இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் வேலை  கடந்த  8 மாதமாக  நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுமிடத்தில் சாலைகள்  மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாக இருப்பதால் இதில்  அடிக்கடி வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதற்கிடையே  சென்ற பத்து நாட்களுக்கு முன்பு பர்கூர் மேற்கு மலைக்கு சென்று வரும் வந்த அரசு பஸ் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் சேற்றில் சிக்கி கொண்டது. இதை காரணம் காட்டி மேற்கு மலைக்கு பஸ்  இயக்கப்படுவதை நிறுத்திக் கொண்டது அரசு போக்குவரத்து கழகம் இதனால் பத்து மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பழையபடி 25 கிலோ மீட்டர் நடந்து தாமரை கரை வந்து பஸ் பிடித்து அந்தியூர் போவதும் பிறகு மீண்டும் 25  கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து தங்கள் கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

 Fifty kilometers walk to buy rice and legumes ..

 

மலைப்பகுதியில் ஆங்காங்கே சிறுபாலங்கள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் தாமதமான  நிலையில் நடந்து வருகின்றது. தற்போது மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மண் சாலையில் சிறு வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருகின்றது. இதனால் மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு வழியின்றி மலைவாழ் மக்கள் நடந்து தான் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரிசி பருப்பு வாங்க கூட ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்ங்க முதியோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற கர்பிணி பெண்களை  தொட்டில் கட்டி காட்டுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய கொடுமைங்க.. அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட்டால் பத்து நாளில் மீதி உள்ள பணிகளை முடித்து பஸ் விட முடியும் ஆனால் கேட்பது மலை வாசி மக்கள் என்பதால் யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்கிறாங்க" என பரிதாபமாக கூறுகிறார்கள் அப்பாவி மலை வாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.