Skip to main content

ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடிக்குக் கருப்புக்கொடி... -விவசாய சங்கம் அறிவிப்பு!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

Agricultural Association

 

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கும் முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.

 

மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, 17 ஆம் தேதி ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கருப்புக் கொடி காட்டி கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 

இதுசம்பந்தமாக அச்சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு கூறும்போது, "தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களும் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளின் வைப்புத்தொகையில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை முடக்க அரசு முயற்சிப்பதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.  

 

கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு, 'ஆடிபட்டம் தேடி விதை' என்பதைப் போல பயிர்  சாகுபடிக்கான  நேரம் தொடங்கிய நிலையில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஏற்கனவே கரோனோ ஊரடங்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

பயிர் சாகுபடிக்கு உரம், பூச்சிக்கொல்லி, விவசாய இடுபொருட்களை வாங்க முடியாமல், விவசாயிகள் அடுத்தடுத்த சாகுபடியைத் தொடங்க முடியாத அவல நிலை ஏற்படும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17 ஆம் தேதி ஈரோடு வரும் போது அவருக்குக் கருப்புக் கொடி காட்டி கன்டன போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

 

http://onelink.to/nknapp

 

அதே நாளில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம். சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளையே நம்பி உள்ள நிலையில், கரோனோ காலத்தில், அரசின் இந்த முடிவு 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்' நடவடிக்கையாக உள்ளது. முதலமைச்சர் ஈரோடு வருவதற்கு முன்பாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.