Skip to main content

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் - மு.க.ஸ்டாலின் 

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
dmk



கொடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

கொடநாடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், இதில் சம்பந்தப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று (24-01-2019) சென்னை மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். 

 

dmk


அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் மு.க.ஸ்டாலின், 
 

கொடநாடா? கொலை நாடா? என்ற நிலையில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘ஒரு கொலைக் குற்றவாளி’ என்பதை ஆதாரங்களோடு சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது என்பது நாட்டிற்கு நன்றாகத் தெரியும். 
 

எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கையை தமிழக ஆளுநர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்கள் ஏற்கனவே, அவரிடத்தில் நேரடியாகச் சென்று 4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து அவரிடத்தில் ஒரு புகார் மனுவைத் தந்திருக்கின்றோம். 
 

அந்த நான்கு புகார்களில் ஒன்று இந்த கொலைக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்களை உடனடியாக முதலமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் இறக்கிட வேண்டும். அப்பொழுது தான், உண்மையான முறையான ஒரு விசாரணை நடைபெற முடியும். 

 

dmk


அடுத்து இரண்டாவதாக கவர்னர் அவர்கள் உடனடியாக இந்திய நாட்டினுடைய ஜனாதிபதியிடத்தில் நேரடியாகச் சென்று இதுகுறித்து விளக்கிச் சொல்லி அவர் மூலமாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

மூன்றாவதாக உயர் நீதிமன்றத்தினுடைய நீதிபதி மேற்பார்வையில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும். 
 

அடுத்து நான்காவதாக, மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படக்கூடிய டிரைவர் கனகராஜ் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர், எனவே, அவருடைய மர்ம மரணம் குறித்தும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், நான்கு முக்கியமான பிரச்னைகளை திராவிட கழகத்தின் சார்பில் நாங்கள் கவர்னரிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். 

 

dmk


ஆனால், இதுவரையில் அவர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என்ற செய்திகள் வரவில்லை. எனவே, அதை வலியுறுத்தக்கூடிய வகையில், வற்புறுத்தக்கூடியச் சூழ்நிலையில் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகங்களின் சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியிருக்கின்றது. 


தி.மு.கழகத்தினுடைய தலைவராக இருக்கக்கூடிய என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், கழகத்தினுடைய செயல்வீரர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் அத்துனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

 

செய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உச்ச நீதிமன்றம் இப்பொழுது உத்தரவிட்டுள்ளது. அது பற்றி உங்களின் கருத்து?
 

மு.க.ஸ்டாலின்: உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒரு போலி மாநாட்டை நடத்திருக்கொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமியிடம் சென்று இந்தச் செய்தியை சொல்லுங்கள். அவர் என்ன பதில் சொல்லுகின்றார் என்று கேட்டுவிட்டு அதனை மக்களிடத்தில் சொல்லுங்கள்.
 

செய்தியாளர்: மக்கள் விரோதப்போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டத்தை பொதுமக்கள் மேற்கொள்கிற சூழ்நிலை இருக்கின்றது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர்கள் மீது கவர்னரிடம் அனைத்துப் புகார்களும் கொடுக்கப்படுகின்றது. கவர்னர் அனைத்துப் புகார்களையும் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றாரா?
 

மு.க.ஸ்டாலின்: மத்திய அரசு பின்னால் இருந்துகொண்டு இவர்களுக்கு முழு அளவிற்கு ஆதரவு தந்துகொண்டு இருக்கின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இருந்தாலும், இதை நாங்கள் விடப்போவதில்லை, தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும்.
 

இவ்வாறு அவர் பேசினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.