Skip to main content

"கரோனா தொற்று பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Cuddalore District Collector warns people to be prevent corona infection

 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, கம்மாபுரம் கீழ் வெள்ளாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறந்து வைத்து ரூ.5 லட்சம் மதிப்பிளான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விருத்தாசலம் திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கான 130 படுக்கைகள்கொண்ட அறைகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம், பாதுகாப்புகள் குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். 

 

முன்னதாக விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை சந்தித்து சமூக இடைவெளியுடன் அமர வேண்டும், முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தி முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு முகக்கவசங்களை கொடுத்தார். மேலும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தமிழக அரசின் உத்தரவின்பேரில், இருக்கைகளில் கொடுக்கப்பட்ட நம்பர்களில் மட்டும்தான் பயணிகள் அமர வேண்டும் என்றும், அதை தவிர்த்து பயணிகளை அதிகளவு ஏற்றக்கூடாது என்றும் உத்தரவிட்டார். பின்னர் ஜங்ஷன் சாலையில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது இளைஞர்கள் முகக்கவசங்கள் அணியாமல்,  ஒன்றாக இருசக்கர வாகனத்தில் வந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர், அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தபின்பு முகக்கவசங்களை அணியும்படி உத்தரவிட்டார்.

 

Cuddalore District Collector warns people to be prevent corona infection

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "கடலூர் மாவட்டத்தில் தற்போதுவரை வைரஸ் தொற்று பரிசோதனை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 350 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 ஆயிரத்து 199 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 9 ஆயிரம் நபர்கள் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,750 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  மாவட்டத்தை பொறுத்தவரை கூடுதலாகவும், போதுமான வசதியுடன் வைரஸ் தொற்றுக்கான படுக்கை அறை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வைரஸ் தொற்று பற்றி அனைத்து பொதுமக்களும் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் சமூக இடைவெளியுடனும் இருக்க வேண்டும்.  கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக இருக்கவேண்டும். மாவட்டத்திலுள்ள 683 ஊராட்சிகளிலும், ஆட்டோ மூலமாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.