Skip to main content

விருத்தாசலத்தில் அ.தி.மு.கவினரிடையே கோஷ்டி மோதல்! மாணவிகள் அவதி! 

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக அரசு மூலம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 2019-20 நடப்பாண்டில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. அதுபோல் இன்று பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

 

t

 

இந்நிலையில் 2017-18-ஆம் ஆண்டில் பயின்ற சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி  பெறாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இன்று பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி  வழங்க இருந்த சூழ்நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். 

 

t

 

அப்போது தங்களுக்கு வழங்க வேண்டிய மடிக்ணினிகளை வழங்கி விட்டு தற்போது பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை நிர்வாகமும் உடன்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட கல்வித்துறை நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

 

t

 

அதுபோல் விருத்தாசலத்திலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்க தலைமையாசிரியர் அழைப்பு விடுத்ததின் பேரில் விருத்தாசலம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் VT. கலைச்செல்வன் தனது ஆதரவாளருடன் பள்ளிக்குச் சென்றார். அப்போது, இச்செய்தியை அறிந்து அங்கு வந்த தொழில் துறை அமைச்சர் MC.சம்பத்தின் ஆதரவாளர்களான நகரச் செயலாளர் சந்திரகுமார் தரப்பினர் அமைச்சரின் அனுமதி பெற்றுத் தான் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று தலைமையாசிரிடம் முறையிட்டதால், எம்எல்ஏ -அமைச்சர் தரப்பு ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல்,  கூச்சல்,  குழப்பம் ஏற்பட்டதால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

பிறகு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்த பள்ளி தலைமையாசிரியர்  அமைச்சர் அனுமதி பெற்று எம்எல்ஏ தலைமையில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.   இச்சம்பவத்தால் மடிக்கணினி வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டதால் காத்திருந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.