Skip to main content

வாழைப் பழத்தையும் விட்டுவைக்காத நஞ்சு... 

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

மருத்துவரிடம் போனதும் அவர் சொல்லும் முதல் அறிவுரை, நிறைய பழங்களை சாப்பிடச் சொல்லுங்கள் என்று. அதில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துகளும், நோய் எதிர்ப்பு சகத்திகளும் இருக்கிறது. தெம்பில்லை என்று அதற்காக ரசாயனம் கலந்த பல பல டானிக்குகளை வாங்கி குடிப்பதைவிட பழங்களை சாப்பிடலாம் என்று சொல்வது வழக்கம்.
 

chemicals are being used in banana for ripening


அதே போல உறவினர்கள், நண்பர்கள், என்று யாரைப் பார்க்கப் போனாலும் அவர்களுக்கு பழங்களை வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு நலம் விசாரித்து வருவதும் வழக்கம். ஆனால் சமீப காலமாக பழங்கள் சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். காரணம் சத்துக்காக பழங்களை சாப்பிட்டது அந்தக் காலம் இப்ப நோய் உற்பத்திக்காக சாப்பிடுவது போல ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

அனைத்துப் பழங்களும் பளிச்சென்று கவர்ச்சியாக இருக்கவும், பிஞ்சிலேயே பழம் போல காட்டவும் இப்படி ரசாயனம் கலவையை பழங்களில் காய்களில் தெளித்து அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்து வைக்கிறார்கள். இந்தப் பழங்களை சாப்பிடும் போது வயிற்று வலியில் தொடங்கி பல பல உபாதைகள் ஏற்படுகிறது.

அதனால் தான் தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும் பழங்கள் வாங்குகிறோம். வாங்கும் பழங்களை நல்ல தண்ணீரில் கொஞ்ச நேரம் ஊர வைத்து கழுவிய பிறகு சாப்பிட வேண்டியுள்ளது. குழந்தைகள் பழங்களைப் பார்த்ததும் அப்படியே எடுத்து கடிப்பதால் எதாவது செய்யுமோ என்ற அச்சம் உள்ளது என்கிறார்கள் பழப்பிரியர்கள்.

ரசாயனம் கலக்காத பழங்களாக பலா, வாழைப் பழங்கள் இருந்து வந்தது. ஆனால் தற்போது அவற்றிலும் ரசாயனம் எனும் விஷம் கலக்கப்படுவதை கானொளிகள் மூலம் காணமுடிகிறது.

அதாவது வாழைப் பழங்களை முன்பு பெரிய கிடங்கில் வைத்து காற்று போகாமல் மூடி அதற்குள் புகையை செலுத்தி ஒரு நாள் முழுவதும் புகையை அந்த கிடங்கிற்குள் சேமித்து வைத்து அடுத்த நாள் பிரித்து வாழைத் தார்களை எடுத்து தண்ணீர் தெளித்து வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பழமாகும்.  ஒரு சணல் சாக்கில் வாழைத் தாரை கட்டிவைத்து அதற்குள் சாம்பிராணி புகை போட்டு வைத்தால் அடுத்த நாள் பழுக்க தொடங்கும்.

ஆனால், கடந்த சில வருடங்களாக விவசாயிகள் வாழைத் தாரை கமிசன் கடைகளுக்கு கொண்டு வரும் வரை காயாக உள்ளது. அதன் பிறகு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் லாரியில் ஏற்றும் போதும், சில்லரை பழ வியாபாரிகள் கடைகளில் வாழைத் தார்களை இறக்கி வைக்கும் போது ரசாயனம் கலந்த கலவையை வாழைக்காய்களில் தெளித்து வைத்துவிடுவதால் சில மணி நேரத்திலேயே அனைத்து காய்களும் மஞ்சள் வண்ணத்தில் பழமாக தெரிகிறது.

வியாபாரிகள் தங்களின் பணத் தேவைக்காக காய்களையும் அவசரமாக ரசாயனம் தெளித்து பழமாக்குவதால் பாதிப்பு அந்தப் பழங்களை வாங்கிச் சாப்பிடும் குழந்தைகள், பொதுமக்களுக்கு தான் என்பதை அவர்கள் உணரவில்லை. அதனால் வாழைப் பழங்கள் வாங்கவும் பொதுமக்கள் யோசிப்பதால் வாழை உற்பத்தி விவசாயிகளின் நிலை தான் வேதனையாக உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் உள்ள கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், புள்ளாண்விடுதி, கருக்காக்குறிச்சி, கொத்தமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களில் பிரதான விவசாயம் வாழை. வாழை விவசாயத்தை வைத்து வாழ்ந்த குடும்பங்கள் ஏராளம்.

கஜா புயல் ஒட்டுமொத்தமாக விவசாயம், மரங்களை அழித்துவிட்ட நிலையிலும் இந்த விவசாயிகளின் ஒரே நம்பிக்கையாக இருந்தது வாழை. சில வருடங்கள் வாழை விவசாயம் செய்தால் இழந்ததை கொஞ்சம் மீட்கலாம் என்று நினைத்து கடந்த ஆண்டைவிட புயலுக்கு பிறகு அதிகமான விவசாயிகள் வாழை பயிரிட்டனர்.

தற்போது அறுவடைக்கு வாழைத்தார்கள் வருகிறது. ஆனால் விலையோ கடும் வீழ்ச்சி ஒரு கிலோ ரூ. 5 க்கு கூட வாங்க வியாபாரிகள் வரவில்லை. பல வாழைத்தார் கமிசன் கடைகளை விடுமுறையும் விட்டு சென்றுவிட்டனர். காரணம் வாழைப் பழங்களிலும் ரசாயனம் தெளிக்கப்படுவது குறித்த பயத்தால் வாழைப்பழங்களையும் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்கிறார்கள் விவசாயிகள்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் வாழைத் தார்களை பழுக்க வைக்க ரசாயனம் தெளிக்கும் வீடியோ வேகமாக பரவிவருகிறது. இதனைப் பார்க்கும் ஒவ்வொருவரும் வாழைப்பழங்களையும் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

ஒரு சில வியாபாரிகள் பணத்தாசையில் இப்படி ரசாயனம் தெளிப்பதால் ஒட்டுமொத்தமாக வாழை விவசாயிகள் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இவற்றை எல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை தூரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாய மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.