உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கரோனா வேகம் அதிரடியாக இருந்து வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றது. தினமும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இன்று, மேலும் 267 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 7,769 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 4,769 பேர் குணமடைந்த நிலையில் 2,654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.