Skip to main content

  தமிழக முக்கிய தலைவர்கள் கூடிய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு 

Published on 07/10/2018 | Edited on 07/10/2018
mml

 

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

 

இந்திய அரசியலமைப்பு சட்டமானது வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் நாட்டின் பன்மை பண்பாடுகளை அங்கீகரித்து, பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மாநிலங்களுக்கு அதிகாரங்களை அளித்து மத்தியிலும் கூட்டாட்சி தத்துவத்தை அங்கீகரித்து வந்தது.

 

இந்தநிலையில், ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே சட்டம் என்ற பெயரால் நாட்டின் பன்மை பண்பாடுகளை சீர்குலைக்கும் பணிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. மாநில உரிமைகளை பறித்து மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. அரசியல் அமைப்பு சட்டத்தில் பண்பாடு விழுமிகளை ஒவ்வொன்றாக பறிக்கும் முயற்சியில் மத்தியல் ஆளும் பிஜேபி அரசு ஈடுபட்டு வருகிறது. அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க ஜனநாயக முறையில் அனைவரும் ஓரணியில் திரட்டு முயற்சியாகத் தான் இந்த மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இன்று ஒன்று கூடினார்கள்.

 

mm2

 

இந்த மாநாட்டிற்காக திருச்சியில் முக்கிய வீதிகளில் விளம்பர பலகைள், போர்டுகள், திருச்சி மாநகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர். காலையிலிருந்து இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

 

திருச்சி நாவலூர் மீரான் திடலில் நடைப்பெற்று வரும் மனிதநேய மக்கள் கட்சியின் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டின் தொடக்கமாக தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் "மாணவச் சமூகம் எழுகவே" கருத்தரங்கம் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் S.நூர்தீன் தலைமையில் நடைப்பெற்றது.

 

mm3

 

திராவிட கழக மாணவர் அணி ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,இந்திய மாணவர் பெருமன்றம் V.மாரியப்பன், அ னைத்திந்திய மாணவய் பெருமன்றம் சீ.தினேஷ்,இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(தமிழ்நாடு) மாநில கல்வி வளாகச்செயலாளர் R.அபுல்ஹசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பேரா.அருணன்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மதுரை மக்கள் கண்கானிப்பகம் செயல் இயக்குனர் ஹென்றி டிபேன்,தமுமுக துணை பொதுச் செயலாளர் முனைவர்.பேரா.ஜெ.ஹாஜாகனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

 

mm4

 

கருத்தரங்கத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் லோகோ மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)
வி.நாராயணசாமி (முதல்வர், புதுச்சேரி மாநிலம்)
வி.பி.துரைசாமி (துணைப் பொதுச்செயலாளர், திமுக)
எஸ்.திருநாவுக்கரசர் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
வைகோ (பொதுச் செயலாளர், மதிமுக)
கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்)
ரா.முத்தரசன் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
பேரா. கே.எம்.காதர் மொய்தீன் (தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
 முனைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா (தலைவர், மமக)
எஸ்.ஹைதர் அலி (பொதுச் செயலாளர் தமுமுக)
ப.அப்துல்சமது (பொதுச் செயலாளர் மமக) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.