Skip to main content

புத்தகம் இல்ல... ஆனா பரீட்சை மட்டும் எழுதணுமாம்! 'பிரைடு' மீது குவியும் புகார்கள்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

தொலைதூரக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்களே வழங்காமல் தேர்வுக்கு அனுப்புகிறது என்று பெரியார் பல்கலை தொலைதூரக் கல்வி மையம் எனப்படும் 'பிரைடு' மீது கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளனர்.

 

Complaints against periyar university 'Pride'


சேலம் பெரியார் பல்கலையில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலமாக பட்டப்படிப்பு, பட்டயக்கல்வி, பட்டமேற்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல்கலை வளாகத்தில் 'பிரைடு' என்ற பெயரில் தனி மையம் செயல்பட்டு வருகிறது. பிரைடு நிர்வாகத்தின் கீழ் 175 தனியார் கல்வி மையங்கள் இயங்கி வருகின்றன. இம்மைய ஒருங்கிணைப்பாளர்கள் 'பிரைடு'க்காக மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.



ஆனால், பிரைடு மைய இயக்குநராக பேராசிரியர் புவனலதா பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக ஒருங்கிணைப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) நடந்தது.
 


ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேலு கூறியது, "பெரியார் பல்கலைக்கழக பிரைடு மூலமாக படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் வரும் மே மாதம் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வுக்காக அபராதமின்றி கட்டணம் செலுத்த வரும் 26ம் தேதியும், அபராதத்துடன் கட்டணம் செலுத்த மே 3ம் தேதி வரையிலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு கட்டண நிலுவை இல்லை என்று நிலுவையில்லாச் சான்றிதழ் வழங்கினால்தான் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று பிரைடு மைய இயக்குநர் புவனலதா தெரிவித்துள்ளார்.



ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு முன்பு இத்தகைய சான்றிதழைக் கொடுக்கும்படி நெருக்கடி தரப்படுகிறது. குறிப்பிட்ட ஓராண்டுக்கு என்றால் பரவாயில்லை. ஆனால், கடந்த ஆண்டுகளில் நிலுவையில்லா சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், அதே மாணவருக்கு முந்தைய ஆண்டுகளிலும் அதுபோல சான்றிதழ் கேட்பதன் நோக்கம் புரியவில்லை.
 


இந்த சான்றிதழ் இல்லை என்றுகூறி, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. முழு கல்விக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் பலருக்கும்கூட நிலுவைக் கட்டணம் உள்ளதாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். 
 


மாணவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தில் அந்தந்த பாடங்களுக்குரிய புத்தகங்கள், அடையாள அட்டை ஆகியவை தரப்பட வேண்டும். ஆனால், இதுவரை பிரைடு மூலம் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களே வழங்கப்படவில்லை. கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக இதே நிலைதான் தொடர்கிறது. ஆன்லைன் மூலம் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன்மூலமாக மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்று பிரைடு நிர்வாகம் சொல்கிறது. ஆனால், ஆன்லைனிலும் எல்லா பாடப்பிரிவுகளுக்கும் புத்தகங்கள் வெளியிடப்படவில்லை.
 


பெரியார் பல்கலையின் பிரைடு மையத்தின் இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் எங்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதேநிலை தொடர்ந்தால், கல்வி மையங்கள் ஒட்டுமொத்தமாக இழுத்து மூடப்படுவதோடு, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதும் பெரிதும் பாதிக்கப்படும்" இவ்வாறு குழந்தைவேலு கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.