Skip to main content

காந்தியை கீழ்த்தரமாக சித்தரித்த சனாதனவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன் 

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
t

 

சிதம்பரத்தில் சுவாமி  சகஜானந்தா சமூக பேரவை சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 129-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   விழாவிற்கு பேரவையின் காப்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தலைமையேற்று பேசுகையில்,  ‘’ புரட்சியாளர்களுக்கும், சமூக சீர்திருத்தவாதிகளின் பிறந்தநாளை ஒரு குறிப்பிட்ட தேதியில் கொண்டாடுவது மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் கொண்டாடலாம்.


கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில் கல்வி நிறுவனங்களை நிறுவிய  சகஜானந்தா ஆன்மீகத்தையும் கல்வியும் இருவிழிகளாக எடுத்து செயல்பட்டுள்ளார்.


அதே காலகட்டத்தில் 17 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும், 12 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.  சகஜானந்தா பின்பற்றியே ஆன்மிகம் சாதி, மதம் கடந்துள்ளது இதனை வரவேற்கிறோம். இதே ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு மனிதர்களிடம்  பிற்போக்குத்தனமான தகவல்களை கூறி சாதிய முரண்பாடுகளை வளர்ப்பதை எதிர்க்கிறோம்.


அம்பேத்கர் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே ஏழைகளுக்கு கல்வி நிறுவனங்களை நிறுவிய சகஜானந்தா கல்வியை வளர்க்கவே ஆன்மீகத்தை பயன்படுத்தியுள்ளார்.

 

th


ஆன்மிகம் என்பது மற்றவர்களின் உணர்வு, நட்பு, உறவுகளை மதிப்பதே ஆகும். திருநீறு பூசிக்கொண்டு பூணூல் அணிந்து கொண்டு ஜாதி ஒழிப்புக்கு குரல் கொடுத்தாள் மோடியாகவும், ராஜாவாகவும் இருந்தாலும் வரவேற்போம். சமத்துவம் மலர செய்யும் ஆன்மிகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் எதிர்த்ததில்லை.  சகஜானந்தரின் கொள்கைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல இந்நாளில் உறுதி ஏற்போம்.  அவரது பிறந்தநாளை தமிழக அரசு அரசு விழாவாக அறிவித்து கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். காந்தி நினைவு நாளில் உத்திரப்பிரதேசத்தில் இந்து மகாசபை தலைவர் பூஜாவின் சகுன் பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடும் சம்பவம் மிகவும் கொடிய விஷ தன்மை உடையது. சனாதன சக்திகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சனாதன வாதிகளின்  புகலிடமாக  இந்து மகாசபை உள்ளது. இது வன்மையாக கன்டிக்கதக்கது. காந்தியை கீழ்தரமாக சித்தரித்து அவரை சுட்டுக்கொன்ற கோட்சே வாழ்க என்று கோஷமிட்ட அவர்கள் மீது மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

 

விழாவில் நந்தனார்  கல்விக் கழகத்தின் தலைவர்  சங்கரன் சகஜானந்தா சமூக பேரவையின் தலைவர் நீதி வளவன் செயலாளர் பாலா துணைத்தலைவர் திருவரசு துணை செயலாளர் ஆதிமூலம் பொருளாளர்  மணவாளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

முன்னதாக சகஜானந்தா தோற்றுவித்த நந்தனார் பள்ளிகளில் கல்வி பயின்று அரசு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்று மற்றும் தங்கப்பதக்கத்தை திருமாவளவன் வழங்கினார். மேலும் சகஜானந்தா மணி மண்டபத்தில் இருந்து பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் முளைப்பாலிகளை தலையில் சுமந்து கொண்டு  மேளதாள முழங்க அவர் வாழ்ந்த இடமான ஓமகுளத்திற்கு பேரணியாக வந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.