Skip to main content

"திட்டமிட்டப்படி காலையில் சட்டமன்றம் நோக்கி பேரணி நடைபெறும்"- தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ பேச்சு!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

சென்னையில் வண்ணாரப்பேட்டையை தொடர்ந்து மண்ணடியிலும் குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக காத்திருப்பு தொடர் போராட்டம் தொடங்கியிருக்கிறது. 5- வது நாளாக கூடியிருக்கும் மக்களிடையே நேற்று (18/02/2020) இரவு 11.00 மணியளவில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான  மு.தமிமுன் அன்சாரி பேசுகையில்,


"அமைதியாக போராடிக் கொண்டிருக்கும்  மக்கள் உணர்வுகளை அதிகார வர்க்கம் மதிக்க வேண்டும். வண்ணாரப்பேட்டையில் காவல்துறை தான்  முதலில் வரம்பு மீறியது. அதன் விளைவாக இன்று தமிழகமெங்கும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் பரவியிருக்கிறது.

chennai caa rally assembly tamimun mla announced

மக்களை அதிகார ஆணவத்தில் ஒடுக்கலாம் என நினைத்தீர்கள். அதன் பிறகு தான் போராட்டம் வலிமைப் பெற்றிருக்கிறது. இது உரிமைகளுக்கான போராட்டம். துப்பாக்கிகளைக் கண்டு மக்கள் பயப்பட மாட்டார்கள். இன்று அதே காவல்துறை ஒரு ஒரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவலர்கள் சுதந்திரமாக "வாட்ஸ் அப்" பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து சீராக போய்க் கொண்டிருக்கிறது. வணிகர்களுக்குப் பாதிப்பில்லை. 
 

அந்த அளவுக்கு யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே மக்கள் வெயிலில், பனியில் போராடுகிறார்கள். பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் கூடியிருக்கிறார்கள். யாராவது இங்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தால் இப்பகுதி இன்ஸ்பெக்டர் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறோம்.

chennai caa rally assembly tamimun mla announced

இந்த சட்டங்கள் மக்கள் விரோதமானவை. சட்டசபையில் நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்தோம். அதை விவாதிக்காமலேயே சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
 

எனவே நாங்கள் மக்கள் மன்றத்தில் நிற்கிறோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிடுவோம் என அறிவித்தோம். நீதிமன்றத்தை வைத்து விளையாடியுள்ளார்கள். தடை என்றார்கள். அந்த தடை எங்களுக்கு பொருந்தாது. எனவே திட்டமிட்டப்படி காலை 10.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் அருகிலிருந்து தேசிய கொடிகள் ஏந்தி சட்டசபை நோக்கி எங்கள் அமைதி பேரணி புறப்படும். அதில் மாற்றமில்லை." இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.