Skip to main content

தீபத்திருவிழா:நகரத்தில் குவிக்கப்பட்ட 10 ஆயிரம் போலீசார்!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

கார்த்திகை மாத தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதை, மலைப்பாதை, நகருக்கு வரும் 9 சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஏடிஜிபி ஜெயந்த் முரளி நேரடி மேற்பார்வையில், வடக்கு மண்டல ஐ.ஐீ நாகராஜ் தலைமையில், மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஏற்பாட்டின் கீழ் சுமார் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
 

karthigai deepam festival

 

9 சாலைகளிலும் பேருந்துகள் அனைத்தும் 3 கி.மீ முன்பே நிறுத்தப்பட்டது. பேருந்துகள் நிறுத்த தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பக்தர்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டிருந்தன. அதோடு பக்தர்களின் பாதுகாப்புக்காக கோயிலுக்குள் 231 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன. அதோடு நகரத்துக்கு வெளியே 119 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன. இது தவிர சில இடங்களில் மறைமுக கேமராக்களும் நிறுப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இதற்காக கோயில், நகர காவல்நிலையம் உட்பட சிலயிடங்களில் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நகரத்தில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருவண்ணாமலை தீபத்திருவிழா; நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Thiruvannamalai Deepatri Festival; Online ticketing from tomorrow

 

திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்திருந்தார். அதேபோல் கார்த்திகை தீபத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோவிலில் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இந்த நிகழ்ச்சியில் 30 லட்சம் மக்கள் பங்கு கொள்ள வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பாதுகாப்பு பணிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது எனச் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிசம்பர் 6 ஆம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண நாளை ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படும் எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் காண 500 ரூபாய் கட்டணத்தில் 500 டிக்கெட்டுகளும், அதே நாள் மாலை 6 மணிக்கு மகா தீபத்தை காண்பதற்கு 600 ரூபாய் கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள், 500 ரூபாய் கட்டணத்தில் 1000 அனுமதி சீட்டுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை காலை 10 மணிக்கு இதற்கான முதல் டிக்கெட்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலைமேல் செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் மக்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம்!

Published on 19/11/2021 | Edited on 20/11/2021

 

More than three lakh devotees flock!

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பிறமாவட்ட மக்கள் மகா தீபத்தன்று திருவண்ணாமலை நகரில் வந்து குவிவார்கள். அன்றைய தினம் மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ. சுற்றளவுள்ள மலையை, அண்ணாமலைக்கு அரோகரா என பாடியபடி கிரிவலம் வருவார்கள். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் 2663 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு ஏறி சிவன் பாதம் எனக் குறிப்பிடப்படும் பகுதியை வணங்கிவிட்டுவருவார்கள். அந்த மலை உச்சியில் தான் மாலை சரியாக 06.00 மணிக்கு தீபம் ஏற்றப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான நடைமுறை.

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி கடந்தாண்டும், இந்த ஆண்டும் பக்தர்கள் கலந்துகொள்ளாத தீபத்திருவிழா நடைபெறுகிறது. தீபத்திருவிழாவின் சாதாரண திருவிழாக்களில் பக்தர்களை கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்த மாவட்ட நிர்வாகம் பரணி தீபம், மகா தீபம் காணத் தடை என அறிவித்தது. இதனை எதிர்த்து ஆன்மீக அமைப்பொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது, நவம்பர் 19 மற்றும் 20- ஆம் தேதி உள்ளூர் மக்கள் 5 ஆயிரம் பேர், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் என 20 ஆயிரம் பேர் கிரிவலத்துக்கு அனுமதிக்கிறோம் என்றது. அதனை ஏற்று உத்தரவாகவும் வெளியிட்டது நீதிமன்றம்.

 

கிரிவலம் வருபவர்கள் ஆதார் கார்டு, கரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் கிரிவலம் வரலாம், சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படும் என அறிவித்தார்கள். நவம்பர் 19- ஆம் தேதி விடியற்காலை கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது.

 

இந்த தகவல் செய்தியாகப் பரவியதும் காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினார்கள். நகரத்துக்குள் வரும் 9 சாலைகளிலும் காவல்துறையினர் நின்று சோதனை நடத்தி அனுப்பத் தொடங்கினார்கள். மதியத்துக்கு மேல் மழை பெய்வது நின்றதால், அதிகளவு பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். இதனால் பக்தர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடுமாறினர். அதனால் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டு இருந்தார்கள்.