
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, சேலம்,ராணிபேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைகாற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த24 மணிநேரத்தில்அதிகபட்சமாக நீலகிரிகோத்தகிரியில் 9 சென்டிமீட்டர் மழையும், குன்னூரில் 7 சென்டிமீட்டரும், சோத்துப்பாறையில் 6 சென்டிமீட்டரும், அலகாரியில் 5 சென்டிமீட்டரும்மழை பதிவாகியுள்ளது.வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைகாற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் அந்த ஐந்து மாவட்டங்களைத் தவிரதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பிற பகுதிகளிலும்நாளை (21.02.2021) மற்றும் நாளை மறுநாள் மிதமான பொழிய வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)