Skip to main content

கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற அரசு ஆணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு!- கோரிக்கைகளை முன்வைக்கும் தனியார் பள்ளிகள் சங்கம்!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Case for cancellatiCase for cancellation of government order not to impose education bill - Private Schools Associationon of government order not to impose education bill - Private Schools Association

 

 

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசு ஆணையினை ரத்து செய்ய வேண்டுமென,  அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கே பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  தமிழக அரசிடம் பதில் மனு தாக்கல் செய்யச் சொன்னது. அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், வழக்கில் ஆஜராகி,  வாதத்தை எடுத்து வைத்தார்.  மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர், தங்களது வாதத்தை முன்வைத்தனர்.  இருதரப்பையும் விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரிடம் கோரிக்கை மனுவைப் பெற்று,  நன்கு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும்,  வரும் 8-ஆம் தேதி, வழக்கை விசாரிப்பதாகவும் தெரிவித்தது.  அதனடிப்படையில்,  அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில்,  தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் பின்வருமாறு,

“கடந்த 2019- 20 கல்வி ஆண்டில், மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டண பாக்கியை வசூலித்துக் கொள்வதற்கு எவ்வித தடையும் விதிக்கக்கூடாது. 2020 -21 ஆம் ஆண்டு கல்விக் கட்டணத்தை, மூன்று தவணைகளில் வசூலித்துக் கொள்ள உத்தரவிட வேண்டும். மேலும், இரண்டு கல்வி ஆண்டுகளாக, கல்லூரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் நிலுவைத் தொகையை, உடனடியாக வழங்க வேண்டும். மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு RTE மூலமாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை,  2018 -19 கல்வி ஆண்டுகளில் 40% வழங்கப்படாமல் உள்ளதையும்,  கடந்த கல்வி ஆண்டு முழுமையாக வழங்கப்படாமல் உள்ளதையும், உடனடியாக வழங்க வேண்டும்.  இக்கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நிறைவு பெற்றவுடன், கால தாமதப்படுத்தாமல் ஸ்காலர்ஷிப் கட்டணம் மற்றும் RTE கட்டணங்களை தாமதமில்லாமல் வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.