Skip to main content

மாநிலங்களவைத் தேர்தலில் களம் இறங்கிய தேர்தல் மன்னன்... 214 முறையாக வேட்புமனு தாக்கல்!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020


தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் "தேர்தல் மன்னன்" என்று அழைக்கப்படுகின்ற பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தேர்தல் அரசியலை கவனிப்பவர்களுக்கு பத்மராஜன் என்ற இந்த பெயர் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கி கவுன்சிலர் தேர்தல் வரை எங்கே தேர்தல் நடைபெற்றாலும் அங்கே முதல் ஆளாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்வார். அந்த வகையில் இதுவரை அவர் 213 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது 214-வது முறையாக விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
 

kl



இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை இருந்துவரும் நிலையில், தற்போது இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அதில் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு கைகெயழுத்தும், 10,000 ரூபாய் டெபாசிட் தொகையும் கட்ட வேண்டும். அந்த வகையில் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே பலமுறை வேட்புமனு தாக்கல் செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவே தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.