Skip to main content

சொத்து தகராறு; தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

brother passed away  his younger brother due to a property dispute
பழனி

 

காவேரிப்பட்டணம் அருகே, சொத்து தகராறில் தம்பி என்றும் பாராமல் அண்ணனும், அவருடைய மகன்களும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுண்டேகுப்பம் கீழாண்டி கொட்டாயைச் சேர்ந்தவர் பூவன். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கோவிந்தம்மாள். இவருக்கு பாலகிருஷ்ணன் (49) என்ற மகனும், இரண்டாவது மனைவி பச்சையம்மாளுக்கு பழனி (48) என்ற மகனும் உள்ளனர்.  

 

தந்தையின் நிலத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக பாலகிருஷ்ணன், பழனி ஆகியோருக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் காவல்நிலையத்தில் இரு தரப்பும் அளித்த புகார் மீது விசாரணை நடந்து வருகிறது.

 

இந்நிலையில், நவ. 30ம் தேதி காலை கேஆர்பி அணை அருகே உள்ள கொல்லாபுரி மாரியம்மன் கோயில் பகுதியில் பழனி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மகன்கள் சதீஷ்குமார் (19), இன்னொரு மகனான 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து, பழனியை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியோடிவிட்டனர்.  இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பழனி, நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.  

 

இதுகுறித்து தகவல் அறிந்த கேஆர்பி அணை காவல்நிலைய காவல்துறையினர் பழனியின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பழனியின் குடும்பத்தினர், உறவினர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து, ஏடிஎஸ்பி சங்கு, டிஎஸ்பி மனோகரன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.  

 

இதற்கிடையே, பழனியை கொலை செய்த பாலகிருஷ்ணன், அவருடைய இரு மகன்களையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரையும் சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.